என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்11 Jan 2019 4:49 AM GMT (Updated: 11 Jan 2019 4:49 AM GMT)
வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளையில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயம் ஆலயத்தின் திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளையில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
இன்று காலை 6 மணிக்கு நினைவு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, 6.15 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட தேர் கூடம், மாதா கெபி, புதுப்பிக்கப்பட்ட கொடிமரம் ஆகியவை அர்ச்சிப்பு நடக்கிறது. தொடர்ந்து மேல்பாலை பங்குத்தந்தை அந்தோணி எம்.முத்து தலைமைதாங்கி திருவிழா கொடியை ஏற்றிவைக்கிறார். இரவு 8.30 மணிக்கு அன்பியங்கள் வளர்ச்சி சங்க பொதுக்கூட்டம், 9 மணிக்கு புனித அந்தோணியார் வரலாற்று நாடகம் ஆகியவை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் இரவு பொதுக்கூட்டம், திருப்பலி, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.
3-ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு திருப்பலி, குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்குதல் நடைபெறுகிறது. இதில் கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 4.30 மணிக்கு நற்கருணை பவனி, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.
7-ம் நாள் விழாவில் இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி, 9-ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் யேசு ரெத்தினம் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலி நிறைவேற்றுகிறார்.
அதைதொடர்ந்து மாலை 6.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு ஆராதனையில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் பவுலோஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி, வாணவேடிக்கை, 10-ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு புனித செபஸ்தியார் தின முதல் திருவிழா திருப்பலி, 8.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெறோம் தாஸ் தலைமைதாங்கி ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். பகல் 1 மணிக்கு தேர்ப்பவனி, இரவு 8 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெயக்குமார், இணை பங்குத்தந்தை சகாய அருள் தேவ், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள், அருட்பணி பேரவை துணைத்தலைவர் பயஸ் சேவியர், செயலாளர் மரிய நான்சி, துணை செயலாளர் பாபியோன் ராஜ், பொருளாளர் எட்வின் சேவியர் செல்வன் ஆகியோர் செய்து வருகின்றார்கள்.
இன்று காலை 6 மணிக்கு நினைவு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, 6.15 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட தேர் கூடம், மாதா கெபி, புதுப்பிக்கப்பட்ட கொடிமரம் ஆகியவை அர்ச்சிப்பு நடக்கிறது. தொடர்ந்து மேல்பாலை பங்குத்தந்தை அந்தோணி எம்.முத்து தலைமைதாங்கி திருவிழா கொடியை ஏற்றிவைக்கிறார். இரவு 8.30 மணிக்கு அன்பியங்கள் வளர்ச்சி சங்க பொதுக்கூட்டம், 9 மணிக்கு புனித அந்தோணியார் வரலாற்று நாடகம் ஆகியவை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் இரவு பொதுக்கூட்டம், திருப்பலி, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.
3-ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு திருப்பலி, குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்குதல் நடைபெறுகிறது. இதில் கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 4.30 மணிக்கு நற்கருணை பவனி, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.
7-ம் நாள் விழாவில் இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி, 9-ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் யேசு ரெத்தினம் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலி நிறைவேற்றுகிறார்.
அதைதொடர்ந்து மாலை 6.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு ஆராதனையில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் பவுலோஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி, வாணவேடிக்கை, 10-ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு புனித செபஸ்தியார் தின முதல் திருவிழா திருப்பலி, 8.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெறோம் தாஸ் தலைமைதாங்கி ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். பகல் 1 மணிக்கு தேர்ப்பவனி, இரவு 8 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெயக்குமார், இணை பங்குத்தந்தை சகாய அருள் தேவ், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள், அருட்பணி பேரவை துணைத்தலைவர் பயஸ் சேவியர், செயலாளர் மரிய நான்சி, துணை செயலாளர் பாபியோன் ராஜ், பொருளாளர் எட்வின் சேவியர் செல்வன் ஆகியோர் செய்து வருகின்றார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X