என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி
    X

    புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி

    சேத்தியாத்தோப்பு அருகே புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சின்னநெல்லிக்கொல்லை கிராமத்தில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த 8-ந் தேதி மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதை தொடர்ந்து ஆலயத்தில் தினசரி பங்கு தந்தை ஆரோக்கிய தாஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நடைபெற்று வந்தது. மேலும் தினந்தோறும் இரவு பவனியும் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடந்தது. தேர்பவனியானது எறும்பூர், நெல்லிக்கொல்லை பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தது.

    அதன் பின்னர் நேற்று காலை 7 மணி அளவில் கூட்டு திருப்பலி நடந்து, பங்கு தந்தை முன்னிலையில் கொடியிறக்கத்துடன் இந்த ஆண்டுக்கான பெருவிழா நிறைவடைந்தது. இதில் சின்னநெல்லிக்கொல்லை, எறும்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் செய்திருந்தனர். 
    Next Story
    ×