என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இளங்கடை புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்5 Jun 2018 3:28 AM GMT (Updated: 5 Jun 2018 3:28 AM GMT)
நாகர்கோவில், இளங்கடை புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 17-ந் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில், இளங்கடை புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 17-ந் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது. திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சியில் கன்னியாகுமரி வட்டார முதன்மை அருட்பணியாளர் ஜோசப் ரொமால்ட் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஜெகன் மறையுரை ஆற்றுகிறார்.
தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை நடக்கிறது. வருகிற 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை மாலையில் நற்செய்தி கூட்டங்கள் நடைபெறுகிறது.
வருகிற 10-ந் தேதி காலை 7 மணிக்கு, முதல் திருவிருந்து திருப்பலியும், 16-ந் தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலியும், இரவு 9 மணிக்கு தேர் பவனியும் நடக்கிறது.
திருவிழாவின் நிறைவு நாளான 17-ந் தேதி காலை 7 மணிக்கு கோட்டார் வட்டார முதன்மை அருட்பணியாளர் மைக்கல் ஏஞ்சலூஸ் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு தேர் பவனியும், இரவு 7 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழாவும் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப் ராஜ் தலைமையில் பங்கு அருட்பணி பேரவையினர், பங்குமக்கள் செய்துள்ளனர்.
தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை நடக்கிறது. வருகிற 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை மாலையில் நற்செய்தி கூட்டங்கள் நடைபெறுகிறது.
வருகிற 10-ந் தேதி காலை 7 மணிக்கு, முதல் திருவிருந்து திருப்பலியும், 16-ந் தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலியும், இரவு 9 மணிக்கு தேர் பவனியும் நடக்கிறது.
திருவிழாவின் நிறைவு நாளான 17-ந் தேதி காலை 7 மணிக்கு கோட்டார் வட்டார முதன்மை அருட்பணியாளர் மைக்கல் ஏஞ்சலூஸ் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு தேர் பவனியும், இரவு 7 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழாவும் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப் ராஜ் தலைமையில் பங்கு அருட்பணி பேரவையினர், பங்குமக்கள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X