என் மலர்
ஆன்மிகம்

பாவ நிவாரணபலி
எபிரேயர் 9:28 இயேசு அநேகருடைய பாவங்களை சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரே தரம் பலியிடப்பட்டார் என்று வேதம் சொல்கிறது.
எபிரேயர் 9:28 இயேசு அநேகருடைய பாவங்களை சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரே தரம் பலியிடப்பட்டார் என்று வேதம் சொல்கிறது.
பழைய ஏற்பாடு காலத்தில் பாவ நிவாரணபலி செலுத்த வருகிறவன். இரண்டு வெள்ளாட்டுக்கிடாக்களை கொண்டு வரவேண்டும். ஆசாரியன் இந்த இரண்டு கிடாக்களை குறித்தும் சீட்டு போடுவான், ஒன்று கர்த்தருக்கு பலி செலுத்தப்பட தீர்மானிக்கப்படும். இன்னொன்று போக்காடாக விட்டு விடப்படும். இந்த பலியாக தெரிந்து கொள்ளப்பட்ட ஆடு அங்குள்ள பலிபீடத்தில் கொல்லப்பட்டு ரத்தம் சிந்தி தன் ஜீவனை கொடுக்கும்.
மற்ற ஆடோ விடுதலை பெற்று சுதந்தரமாக வெளியே செல்லும்(லேவி 16:7.26). யோவான் இயேசுவை குறித்து சொல்லும் போது இதோ உலகத்தில் பாவங்களை சுமக்கும் தேவ ஆட்டுக்குட்டி என்று சொல்கிறார். இயேசு பாடுபடும் நேரம் வந்த போது அவரை விசாரித்து அவரிடம் ஒரு குற்றமும் காணவில்லை என்று தெரிந்து விடுதலை செய்ய நினைத்த பிலாத்து கொடுமையான மனிதனான பரபாஸ் என்பவனையும் ஒரு குற்றமும் செய்யாத இயேசுவையும் கொண்டு வந்து கேட்கிறான் இயேசுவையா? பரபாசையா? யார்? கொலை செய்யப்பட வேண்டும் என்றான். ஜனங்கள் இயேசுவை சிலுவையில் அறைந்து கொலை செய்யப்பட வேண்டும் என்றும் பரபாசை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டார்கள். இயேசு பலி ஆடாக பலியிடப்பட்டார்.
பரபாஸ் என்பவன் விடுதலை பெற்றவனாக வெளியே வந்தான். இயேசு அக்கிராமத்தில் ஒருவராக எண்ணப்பட்டு அநேகருடைய பாவத்தைத்தாமே சுமந்தார் ஏசா (53:12) என்று வேதம் சொல்கிறது. தேவப்பிள்ளைகளே அவர் உன் தண்டனைகளை தன்மேல் ஏற்றுக்கொண்டு பாடனுபவித்து இருக்கிறபடியால் நீ நீதிமானாய் விடுதலையாக்கப்பட்டிருக்கிறாய் என்பதை மறந்து போகாதே.
அவர் நம்முடைய பாவங்களை சுமந்து தீர்க்க வெளிப்பட்டார். அவரிடத்தில் பாவமில்லை (1 யோவான்:3:5) என்பதை அறிந்து இயேசு சிந்தின ரத்தத்தினாலே பாவமன்னிப்பை பெற்றுக்கொள்வோம். நமக்கு ஒரு விடுதலை உண்டு. இயேசுவே பெற்றுத்தந்திருக்கிறார். இன்று நீ எதிலிருந்து விடுதலையாக வேண்டுமோ? அதிலிருந்து இயேசுவே உனக்கு விடுதலை தருவார். உனக்கு பதில் இயேசு மரித்தார்.
பாதிரியர். எஸ்.ஜெபமணி.
பழைய ஏற்பாடு காலத்தில் பாவ நிவாரணபலி செலுத்த வருகிறவன். இரண்டு வெள்ளாட்டுக்கிடாக்களை கொண்டு வரவேண்டும். ஆசாரியன் இந்த இரண்டு கிடாக்களை குறித்தும் சீட்டு போடுவான், ஒன்று கர்த்தருக்கு பலி செலுத்தப்பட தீர்மானிக்கப்படும். இன்னொன்று போக்காடாக விட்டு விடப்படும். இந்த பலியாக தெரிந்து கொள்ளப்பட்ட ஆடு அங்குள்ள பலிபீடத்தில் கொல்லப்பட்டு ரத்தம் சிந்தி தன் ஜீவனை கொடுக்கும்.
மற்ற ஆடோ விடுதலை பெற்று சுதந்தரமாக வெளியே செல்லும்(லேவி 16:7.26). யோவான் இயேசுவை குறித்து சொல்லும் போது இதோ உலகத்தில் பாவங்களை சுமக்கும் தேவ ஆட்டுக்குட்டி என்று சொல்கிறார். இயேசு பாடுபடும் நேரம் வந்த போது அவரை விசாரித்து அவரிடம் ஒரு குற்றமும் காணவில்லை என்று தெரிந்து விடுதலை செய்ய நினைத்த பிலாத்து கொடுமையான மனிதனான பரபாஸ் என்பவனையும் ஒரு குற்றமும் செய்யாத இயேசுவையும் கொண்டு வந்து கேட்கிறான் இயேசுவையா? பரபாசையா? யார்? கொலை செய்யப்பட வேண்டும் என்றான். ஜனங்கள் இயேசுவை சிலுவையில் அறைந்து கொலை செய்யப்பட வேண்டும் என்றும் பரபாசை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டார்கள். இயேசு பலி ஆடாக பலியிடப்பட்டார்.
பரபாஸ் என்பவன் விடுதலை பெற்றவனாக வெளியே வந்தான். இயேசு அக்கிராமத்தில் ஒருவராக எண்ணப்பட்டு அநேகருடைய பாவத்தைத்தாமே சுமந்தார் ஏசா (53:12) என்று வேதம் சொல்கிறது. தேவப்பிள்ளைகளே அவர் உன் தண்டனைகளை தன்மேல் ஏற்றுக்கொண்டு பாடனுபவித்து இருக்கிறபடியால் நீ நீதிமானாய் விடுதலையாக்கப்பட்டிருக்கிறாய் என்பதை மறந்து போகாதே.
அவர் நம்முடைய பாவங்களை சுமந்து தீர்க்க வெளிப்பட்டார். அவரிடத்தில் பாவமில்லை (1 யோவான்:3:5) என்பதை அறிந்து இயேசு சிந்தின ரத்தத்தினாலே பாவமன்னிப்பை பெற்றுக்கொள்வோம். நமக்கு ஒரு விடுதலை உண்டு. இயேசுவே பெற்றுத்தந்திருக்கிறார். இன்று நீ எதிலிருந்து விடுதலையாக வேண்டுமோ? அதிலிருந்து இயேசுவே உனக்கு விடுதலை தருவார். உனக்கு பதில் இயேசு மரித்தார்.
பாதிரியர். எஸ்.ஜெபமணி.
Next Story






