என் மலர்
ஆன்மிகம்

சிலுவை மரத்திலிருந்து ஒரு வெற்றி முழக்கம்
ஆண்டவர் இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது அவர் உச்சரித்த கடைசி ஏழு வார்த்தைகளில் ஆறாவது வார்த்தை “எல்லாம் நிறைவேறிற்று” (யோவான் 19:30).
ஆண்டவர் இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது அவர் உச்சரித்த கடைசி ஏழு வார்த்தைகளில் ஆறாவது வார்த்தை “எல்லாம் நிறைவேறிற்று” (யோவான் 19:30). எல்லாம் நிறைவேறிற்று என்பதற்கு என் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று பொருள் அல்ல, மாறாக அது வெற்றியின் முழக்கம். நாம் நம்முடைய சாதாரண பார்வையில் அது தோல்வியின் குரலாக விரக்தியின் உச்சத்தில் கதறுபவரின் சத்தம் போலத்தான் பார்க்க முடியும்.
அதாவது, நான் முயற்சி செய்தேன், ஆனால் தோற்றுவிட்டேன் என்பது போல தோன்றும். இதற்கு காரணம், உலகை மீட்க வந்த உன்னத தேவன் சிலுவையில் தொங்கிக் கொண்டு இருக்க, அவரை கொலை செய்பவர்கள் அவருக்கு முன் திடமாக நின்றுகொண்டு அவரை எள்ளி நகையாடி கொண்டும், அவரை சிலுவையிலிருந்து இறங்கிவர கூறி சவால் விட்டுக்கொண்டும் இருப்பது, ஆண்டவர் இயலாமல் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை நமக்கு உருவாக்கலாம்.
கசையால் அடிகள் வாங்கி தசைகள் கிழிந்து குருதி வழிந்தோடும் நிலையில் சிலுவை மரத்தில் தொங்கி கொண்டு எப்படி அவர் வெற்றியின் குரலாக முழங்க முடியும் என்று எண்ணத் தோன்றும். மீட்பின் வரலாற்றோடு விவிலியத்தின் முன்னறிவிப்புகளோடு இறை நம்பிக்கையோடு நாம் அதைப் பொருத்தி பார்த்தால் தான் அது வெற்றியின் முழக்கம் என்பது தெளிவாகத் தெரியும்.
எல்லாம் நிறைவேறிற்று என்பதற்கு “தெதேலேஸ்தாயி” என்ற கிரேக்க வார்த்தையை நற்செய்தியாளர் பயன்படுத்துகிறார். இது தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் ஒரு எளிய வார்த்தை. ஒரு வேலையாள் தன் வேலைகளை முடித்தவுடன் தன் தலைவரிடம் வந்து எல்லாம் முடிஞ்சிடுச்சி (தெதேலேஸ்தாயி) என்று தன் பணியின் நிறைவை சொல்வது. ஒரு சிற்பி அல்லது ஒரு ஓவியர் தன் சிலை அல்லது ஓவியம் முழு வடிவம் பெற்றவுடன் எல்லாம் முடிஞ்சிடுச்சி என்று மனமகிழ்வுடன் சொல்வது போல, ஆண்டவர் இயேசு தன் தந்தையிடம் தன்னுடைய மீட்பின் பணிகள் அனைத்தும் மிகச்சரியாய் முடிந்துவிட்டது என்று கூறுகிறார்.
கெத்சமணி தோட்டத்தில் தன்னைக் கைது செய்ய வந்த படைவீராகளிடம் “நான் தான் என்று துணிந்து கூறுகிறார். அவர்கள் சற்று பின்னோக்கி செல்கின்றனர். பேதுருவிடம் வாளை உரையில் போடு என்று சொல்கிறார். தன் தந்தையிடம் சொல்லி தூதர்களை அனுப்பி போர் புரிய சொல்ல கேட்கவில்லை. தந்தையின் விருப்பம் நிறைவேறிவிட்டது (மாற்கு 14:36) பழைய ஏற்பாட்டின் வாக்குகள் அனைத்தும் நிறைவேறிவிட்டன.
சாவு முடிந்துவிட்டது. பாவம் முடிந்துவிட்டது என்ற தன் வருகையின் நோக்கம் வெற்றிப் பெற்றுவிட்டதை முழங்குகின்றார். முடிவில்லாதவருக்கு எதுவும் முடிவாக இருக்க முடியாது. எல்லாம் நிறைவேறியது ஒரு வெற்றியின் குரல் கீழ்படிதலின் குரல் மற்றும் நமக்கு நம்பிக்கை அளிக்கும் குரல் மனித சமூகத்தின் விடுதலைக்காக எல்லாம் நிறைவேறிற்று. மண்ணகத்தில் போரினை முடித்து விட்டு உன்னருகே வருகின்றேன் தந்தையே என்ற வெற்றியின் முழக்கம். அதனால் தான் நாம் அந்த நாளை புனித வெள்ளி என்று போற்றுகிறோம்.
தேவதாஸ், பங்குத்தந்தை,தூய அலங்கார அன்னை பேராலயம், குடந்தை.
அதாவது, நான் முயற்சி செய்தேன், ஆனால் தோற்றுவிட்டேன் என்பது போல தோன்றும். இதற்கு காரணம், உலகை மீட்க வந்த உன்னத தேவன் சிலுவையில் தொங்கிக் கொண்டு இருக்க, அவரை கொலை செய்பவர்கள் அவருக்கு முன் திடமாக நின்றுகொண்டு அவரை எள்ளி நகையாடி கொண்டும், அவரை சிலுவையிலிருந்து இறங்கிவர கூறி சவால் விட்டுக்கொண்டும் இருப்பது, ஆண்டவர் இயலாமல் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை நமக்கு உருவாக்கலாம்.
கசையால் அடிகள் வாங்கி தசைகள் கிழிந்து குருதி வழிந்தோடும் நிலையில் சிலுவை மரத்தில் தொங்கி கொண்டு எப்படி அவர் வெற்றியின் குரலாக முழங்க முடியும் என்று எண்ணத் தோன்றும். மீட்பின் வரலாற்றோடு விவிலியத்தின் முன்னறிவிப்புகளோடு இறை நம்பிக்கையோடு நாம் அதைப் பொருத்தி பார்த்தால் தான் அது வெற்றியின் முழக்கம் என்பது தெளிவாகத் தெரியும்.
எல்லாம் நிறைவேறிற்று என்பதற்கு “தெதேலேஸ்தாயி” என்ற கிரேக்க வார்த்தையை நற்செய்தியாளர் பயன்படுத்துகிறார். இது தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் ஒரு எளிய வார்த்தை. ஒரு வேலையாள் தன் வேலைகளை முடித்தவுடன் தன் தலைவரிடம் வந்து எல்லாம் முடிஞ்சிடுச்சி (தெதேலேஸ்தாயி) என்று தன் பணியின் நிறைவை சொல்வது. ஒரு சிற்பி அல்லது ஒரு ஓவியர் தன் சிலை அல்லது ஓவியம் முழு வடிவம் பெற்றவுடன் எல்லாம் முடிஞ்சிடுச்சி என்று மனமகிழ்வுடன் சொல்வது போல, ஆண்டவர் இயேசு தன் தந்தையிடம் தன்னுடைய மீட்பின் பணிகள் அனைத்தும் மிகச்சரியாய் முடிந்துவிட்டது என்று கூறுகிறார்.
கெத்சமணி தோட்டத்தில் தன்னைக் கைது செய்ய வந்த படைவீராகளிடம் “நான் தான் என்று துணிந்து கூறுகிறார். அவர்கள் சற்று பின்னோக்கி செல்கின்றனர். பேதுருவிடம் வாளை உரையில் போடு என்று சொல்கிறார். தன் தந்தையிடம் சொல்லி தூதர்களை அனுப்பி போர் புரிய சொல்ல கேட்கவில்லை. தந்தையின் விருப்பம் நிறைவேறிவிட்டது (மாற்கு 14:36) பழைய ஏற்பாட்டின் வாக்குகள் அனைத்தும் நிறைவேறிவிட்டன.
சாவு முடிந்துவிட்டது. பாவம் முடிந்துவிட்டது என்ற தன் வருகையின் நோக்கம் வெற்றிப் பெற்றுவிட்டதை முழங்குகின்றார். முடிவில்லாதவருக்கு எதுவும் முடிவாக இருக்க முடியாது. எல்லாம் நிறைவேறியது ஒரு வெற்றியின் குரல் கீழ்படிதலின் குரல் மற்றும் நமக்கு நம்பிக்கை அளிக்கும் குரல் மனித சமூகத்தின் விடுதலைக்காக எல்லாம் நிறைவேறிற்று. மண்ணகத்தில் போரினை முடித்து விட்டு உன்னருகே வருகின்றேன் தந்தையே என்ற வெற்றியின் முழக்கம். அதனால் தான் நாம் அந்த நாளை புனித வெள்ளி என்று போற்றுகிறோம்.
தேவதாஸ், பங்குத்தந்தை,தூய அலங்கார அன்னை பேராலயம், குடந்தை.
Next Story






