என் மலர்
ஆன்மிகம்

புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா மற்றும் பங்கு நூற்றாண்டு தொடக்க விழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 21-ந் தேதி வரை நடக்கிறது.
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா மற்றும் பங்கு நூற்றாண்டு தொடக்க விழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 21-ந் தேதி வரை நடக்கிறது.
நாளை மாலை 5.45 மணிக்கு செபமாலை, திருக்கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. இதற்கு முன்னாள் பங்குத்தந்தை அந்தோணி எம்.முத்து தலைமை தாங்குகிறார். நாஞ்சில் வழிகாட்டி மைய இயக்குனர் ஜோஸ் ராபின்சன் மறையுரையாற்றுகிறார்.
13-ந் தேதி காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலியும் நடக்கிறது. இதற்கு முன்னாள் பங்குத்தந்தை இயேசு ரெத்தினம் தலைமை தாங்குகிறார். முன்னாள் இணை பங்குத்தந்தை சர்ஜின் ரூபஸ் மறையுரையாற்றுகிறார்.
14-ந் தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, திருமுழுக்கு வழங்குதல் நடக்கிறது. இதற்கு தக்கலை அருட்பணி மரிய டேவிட் தலைமை தாங்குகிறார். முன்னாள் இணை பங்குத்தந்தை சுஜன்குமார் மறையுரையாற்றுகிறார். மாலை 4.30 மணிக்கு நற்கருணை பவனி, நற்கருணை ஆசீர் நடக்கிறது. இதற்கு முன்னாள் பங்குத்தந்தை மரியவின்சென்ட் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு புனித செபஸ்தியார் மறைக்கல்வி கழகத்தின் 100-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமையில் நடக்கிறது.
15-ந் தேதி திருப்பலி முளகுமூடு மறைவட்ட முதல்வர் ஹிலாரி தலைமையிலும், 16-ந் தேதி திருப்பலி முன்னாள் பங்குத்தந்தை சேவியர்புரூஸ் தலைமையிலும் நடக்கிறது.

17-ந் தேதி திருப்பலி அருட்பணி தீஸ்மாஸ் தலைமையில் நடக்கிறது. அருட்பணி எக்ரமென்ஸ் மைக்கேல் மறையுரையாற்றுகிறார்.
18-ந் தேதி 7-ம் திருவிழா நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு முன்னாள் இணை பங்குத்தந்தை குணபால் தலைமை தாங்குகிறார். அருட்பணி அருளானந்த் மறையுரை நிகழ்த்துகிறார். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.
19-ந் தேதி காலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு அருட்பணி ஆன்றனி செலஸ்டின் ஜெயபாலன் தலைமை தாங்குகிறார். காலை 11 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது. மாலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு திருத்துவபுரம் முதல்வர் புஷ்பராஜ் தலைமை தாங்குகிறார். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.
20-ந் தேதி 9-ம் திருவிழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு திருப்பலி, முதல் திருவிருந்து நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு மாலை ஆராதனைக்கு அருட்பணி சாலமன் தலைமை தாங்குகிறார். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.
21-ந் தேதி காலை 5.30 மணிக்கு நடைபெறும் ஆடம்பர கூட்டு திருப்பலிக்கு முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மதியம் 1 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெயக்குமார், இணை பங்குத்தந்தை ஆல்வின் விஜய், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள், பங்கு அருட்பணி பேரவையினர் செய்து வருகிறார்கள்.
Next Story






