என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தூய அந்தோணியார் ஆலய பங்கு குடும்பவிழா இன்று தொடங்குகிறது
    X

    தூய அந்தோணியார் ஆலய பங்கு குடும்பவிழா இன்று தொடங்குகிறது

    நாகர்கோவில் குருசடியில் உள்ள தூய அந்தோணியார் ஆலயத்தின் பங்கு குடும்ப விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் குருசடியில் உள்ள தூய அந்தோணியார் ஆலயத்தின் பங்கு குடும்ப விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. அதன்படி, இன்று மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு புதிய கொடிமரம் அர்ச்சிப்பு, திருக்கொடியேற்றம், கூட்டுத்திருப்பலி நடக்கிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். இதில் கத்தோலிக்க சேவா சங்கம், கத்தோலிக்க சங்கம், புனித வின்சென்ட் தே பவுல் சங்கத்தினர் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.

    இரவு 8 மணிக்கு அருட்பணியாளர் ஜார்ஜ் வின்சென்ட் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதைதொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவின் மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, திருப்பலியும், இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டமும், அதனைதொடர்ந்து கலைநிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    3-ம் நாள் விழாவில் காலை 6.30 மணிக்கு அருட்பணியாளர் தார்சியுஸ்ராஜ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து மறைமாவட்ட செயலாளர் இம்மானுவேல்ராஜ் மறையுரை நிகழ்த்துகிறார். மாலை 6 மணிக்கு மேலராமன்புதூர் பங்குத்தந்தை ஆன்றனி சகாய ஆனந்த் தலைமயில் நற்கருணை ஆராதனை, நற்கருணை பவனி நடைபெறுகிறது. இதில் வட்டக்கரை பங்குத்தந்தை அமல்ராஜ், அருட்பணியாளர் சகாய கிளாசின் ஆகியோர் மறையுரையாற்றுகின்றனர்.

    7-ம் நாள்விழாவில் மாலை 5.45 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் தலைமையில் திருப்பலி நடக்கிறது. தஞ்சாவூர் மறைமாவட்ட அருட்பணியாளர் அந்தோணி பல்தசார் மறையுரையாற்றுகிறார்.

    9-ம் நாள் விழாவில் காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு கோட்டார் குருகுல முதல்வர் கிலேரியஸ் தலைமைதாங்குகிறார். அருட்பணியாளர் எரோணிமுஸ் மரையுறையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் ஜார்ஜ் வின்சென்ட் தலைமையில் மாலை ஆராதனை நடக்கிறது. அருட்பணியாளர் தாமஸ் ஜோன்ஸ் மறையுரை நிகழ்த்துகிறார்கள். இதைதொடர்ந்து இரவு 9.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறுகிறது.

    14-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு தேரில் திருப்பலி, 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. இதற்கு ஓய்வுபெற்ற கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமைதாங்குகிறார்.

    காலை 9 மணிக்கு அருட்பணியாளர் சேவியர் மூன்றாம் திருப்பலியும், அருட்பணியாளர் பெர்க்மான்ஸ் மறையுரையும் நிகழ்த்துகிறார்கள். தொடர்ந்து மதியம் 2 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. இரவு 8 மணிக்கு கொடிஇறக்கம், நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது. அதைதொடர்ந்து, பொதுக்கூட்டமும், கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிரான்சிஸ் போர்ஜியா, பங்கு மேய்ப்புப்பணி பேரவை மற்றும் பங்கு மக்கள் செய்துவருகின்றனர்.
    Next Story
    ×