என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வாழ்க்கையில் உண்மையான மனம் மாற்றம்
Byமாலை மலர்17 Jun 2017 7:00 AM GMT (Updated: 17 Jun 2017 7:00 AM GMT)
கடவுளுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்க வேண்டிய அவசியத்தை குறித்து விழிப்புணர்வு ஊட்டிய அவனோ, தன்னுடைய வாழ்க்கையை அவ்விதம் வைக்க விழிப்பாய் இருக்கவில்லை.
“என் சொந்த திராட்சை தோட்டத்தையோ நான் காக்கவில்லை-உன்னதப்பாட்டு 1:6”
இரண்டு பெண்கள் பதநீர் பானைகளை சுமந்தபடி சென்று கொண்டிருந்தனர். திடீரென்று ஒருத்தியின் கால் எங்கோ இடற தலையில் இருந்த பானை சாய்ந்தது. அதற்குள் மற்றவள் அது விழுந்துவிடாதபடி கைகளால் தாங்கச் சென்ற போது அந்த பானையும் விழுந்து உடைந்தது. இவள் தலையில் இருந்த பானையும் விழுந்து உடைந்தது.
மற்றவளின் பானையை விழுந்துவிடாதபடி தடுக்கப்போனது நல்லதுதான் ஆனால் தன் தலையிலும் பானை இருப்பதை அவள் நினையாமல் போனதால் இரண்டும் நஷ்டம் அடைந்தது. சில நேரங்களில் மற்றவர்கள் தவறக்கூடாது, தடம்புரளக்கூடாது, தகாத விதமாய் போய்விடக்கூடாது என்று அதிகமாக நாம் ஜாக்கிரதை பட்டு செயல்படுகிறோம்.
ஆனால் மற்றவர்கள் சரியாக இருக்கும்படி எதிர்பார்ப்போடு செயல்படுகிற நாம் சரியாக இருக்கிறோமா என்பதை கவனித்து செயல்பட மறந்துவிடுகிறோம். உண்மை, நேர்மை, நாணயம், அன்பு, பரிசுத்தம், தாழ்மை, ஒழுக்கம் என்று மற்றவர்கள் இருக்கும்படி பிரசங்கிக்கும் எத்தனையோ இறைப்பணியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் அவைகளை தவறவிட்டுவிட்டு சிறப்பற்றவர்களாய் நிற்பதை காண்கின்றோம். எத்தனையோ பேர் தங்களுடைய வாழ்க்கையில் உண்மையான மனம் மாற்றம் ஏற்பட்டதா என்று சிந்திக்காமல் இருக்கின்றனர்.
சாலமோனுடைய நீதிமொழிகள் யாரையும் சிந்திக்கத் தூண்டும் தன்மையுள்ளவை. அவை மனிதன் எப்படி நடக்க வேண்டும், அவனுடைய நடவடிக்கைகள் எவ்விதம் இருந்தால் கடவுள் அவனை ஆசீர்வதிப்பார் என்று தெளிவாக கூறுகின்றன.
ஆனால் கடவுளுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்க வேண்டிய அவசியத்தை குறித்து விழிப்புணர்வு ஊட்டிய அவனோ, தன்னுடைய வாழ்க்கையை அவ்விதம் வைக்க விழிப்பாய் இருக்கவில்லை. கடவுளுடைய வழிகளில் நடப்பதற்கு அனேகருக்கு தூண்டுதல்கள் கொடுத்த அவனோ, ஒருநாள் தேவனுடைய வழிகளை விட்டு விலகிப்போய் கடவுளால் வரும் மகிமையை இழந்து போனான். தங்களை எந்த விதத்திலும் செம்மை படுத்தாத பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மேல் அதிக அக்கரை கொண்டு, அவர்கள் ஒழுங்காக இருக்கும்படி அதிக ஜாக்கிரதை காண்பிக்கிறார்கள். ஆனால் பயனில்லை. பெற்றோர் வழியே பிள்ளைகளும் போகிறார்கள். ஆம். மற்றவர்கள்மேல் கரிசனை கொள்வது நல்லது. அதேவேளையில் நம்மை குறித்தும் தேவையான அளவு கரிசனை வேண்டும்.
“உயர்ந்த கருத்துக்களை மனிதன் காதலிக்கிறான். கரம்பிடிக்க சொன்னாலோ நைசாக நழுவி விடுகிறான்.”
- சாம்சன் பால்.
இரண்டு பெண்கள் பதநீர் பானைகளை சுமந்தபடி சென்று கொண்டிருந்தனர். திடீரென்று ஒருத்தியின் கால் எங்கோ இடற தலையில் இருந்த பானை சாய்ந்தது. அதற்குள் மற்றவள் அது விழுந்துவிடாதபடி கைகளால் தாங்கச் சென்ற போது அந்த பானையும் விழுந்து உடைந்தது. இவள் தலையில் இருந்த பானையும் விழுந்து உடைந்தது.
மற்றவளின் பானையை விழுந்துவிடாதபடி தடுக்கப்போனது நல்லதுதான் ஆனால் தன் தலையிலும் பானை இருப்பதை அவள் நினையாமல் போனதால் இரண்டும் நஷ்டம் அடைந்தது. சில நேரங்களில் மற்றவர்கள் தவறக்கூடாது, தடம்புரளக்கூடாது, தகாத விதமாய் போய்விடக்கூடாது என்று அதிகமாக நாம் ஜாக்கிரதை பட்டு செயல்படுகிறோம்.
ஆனால் மற்றவர்கள் சரியாக இருக்கும்படி எதிர்பார்ப்போடு செயல்படுகிற நாம் சரியாக இருக்கிறோமா என்பதை கவனித்து செயல்பட மறந்துவிடுகிறோம். உண்மை, நேர்மை, நாணயம், அன்பு, பரிசுத்தம், தாழ்மை, ஒழுக்கம் என்று மற்றவர்கள் இருக்கும்படி பிரசங்கிக்கும் எத்தனையோ இறைப்பணியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் அவைகளை தவறவிட்டுவிட்டு சிறப்பற்றவர்களாய் நிற்பதை காண்கின்றோம். எத்தனையோ பேர் தங்களுடைய வாழ்க்கையில் உண்மையான மனம் மாற்றம் ஏற்பட்டதா என்று சிந்திக்காமல் இருக்கின்றனர்.
சாலமோனுடைய நீதிமொழிகள் யாரையும் சிந்திக்கத் தூண்டும் தன்மையுள்ளவை. அவை மனிதன் எப்படி நடக்க வேண்டும், அவனுடைய நடவடிக்கைகள் எவ்விதம் இருந்தால் கடவுள் அவனை ஆசீர்வதிப்பார் என்று தெளிவாக கூறுகின்றன.
ஆனால் கடவுளுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்க வேண்டிய அவசியத்தை குறித்து விழிப்புணர்வு ஊட்டிய அவனோ, தன்னுடைய வாழ்க்கையை அவ்விதம் வைக்க விழிப்பாய் இருக்கவில்லை. கடவுளுடைய வழிகளில் நடப்பதற்கு அனேகருக்கு தூண்டுதல்கள் கொடுத்த அவனோ, ஒருநாள் தேவனுடைய வழிகளை விட்டு விலகிப்போய் கடவுளால் வரும் மகிமையை இழந்து போனான். தங்களை எந்த விதத்திலும் செம்மை படுத்தாத பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மேல் அதிக அக்கரை கொண்டு, அவர்கள் ஒழுங்காக இருக்கும்படி அதிக ஜாக்கிரதை காண்பிக்கிறார்கள். ஆனால் பயனில்லை. பெற்றோர் வழியே பிள்ளைகளும் போகிறார்கள். ஆம். மற்றவர்கள்மேல் கரிசனை கொள்வது நல்லது. அதேவேளையில் நம்மை குறித்தும் தேவையான அளவு கரிசனை வேண்டும்.
“உயர்ந்த கருத்துக்களை மனிதன் காதலிக்கிறான். கரம்பிடிக்க சொன்னாலோ நைசாக நழுவி விடுகிறான்.”
- சாம்சன் பால்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X