என் மலர்
ஆன்மிகம்

தியாக பலிக்கு தன்னையே தந்தவர் இயேசு
மானிடர் மீது கொண்ட அன்பின் காரணமாக தன்னையே இந்த உலகிற்கு வழங்கிய இயேசுவின் ஒப்பற்ற தியாக பலியை நினைத்து நன்றி கூறுவோம்.
‘தண்ணீரை விட ரத்தம் கடினமானது.‘ ஒரு வகையில் பார்த்தால் ரத்தத்தின் அடிப்படையும் தண்ணீர் தான். அதனால் ரத்தத்தை, ‘செந்நீர்‘ என தமிழ் மரபு கூறுகிறது. உடலின் தட்ப வெப்ப மாற்றத்தால், ரத்தம் உயிருக்கு ஆதாரமாக இருக்கிறது. மனிதனோ, விலங்குகளோ எதுவாயினும் அந்தந்த உடலுக்குள் இருக்கும் வரை ரத்தம் என்பது ஒரு சக்தி வாய்ந்த திரவம். உயிர் வாழ்வதற்கு தவிர்க்க முடியாத ஆதாரமாக இருப்பது ரத்தம் தான்.
ஆனால் உடலில் இருந்து ரத்தம் வெளியேறிய பிறகும், அதற்கு அதே வல்லமை உண்டா? அதிலும் மனிதர்களை தூய்மைப்படுத்தும் அளவிற்கு அந்த ரத்தம் சக்தி பெற்றதா? ஆம். சக்தி பெற்றது தான். அது எப்படி? இயேசு தம்முடைய ரத்தத்தினாலேயே மனித குலத்தை தூய்மைப்படுத்தி, அதை கரை சேர்க்க சித்தமானார். அப்பத்தையும், திராட்சை ரசத்தையும் பகிர்ந்தளித்து “இது என் உடல் - இது என் ரத்தம்“ என்று இயேசு கூறினார். அது வெறும் உருவகமல்ல. அது ஓர் உண்மை.

அந்த உண்மை, இயேசுவினுடைய முழு வாழ்வின் பண்புகளையும் தூய லட்சியத்தையும் அப்படியே சித்தரிப்பதாகும். அது அவைகளின் சாரமும் ஆகும். இயேசுவின் உண்மையான உடல், மெய்யான ரத்தம் இவை இரண்டும் மக்களுக்காக தகனப்பலி ஆகிறது. இவ்விதமாக அவர் தன் ஊனையும், உதிரத்தையும் நமக்கெல்லாம் பங்கிட்டு தந்ததின் மூலம் தம்முடைய உள்ளத்தையே உலகிற்கு (நமக்கு) தந்திருக்கிறார்.
பணம் படைத்த செல்வந்தருக்கு, பணத்தின் அருமை தெரிவதில்லை. பெற்றோரின் பாசத்தால் தாலாட்டப்படும் குழந்தைகளுக்கு, பல தருணங்களில் பெற்றோரின் அருமை தெரிவதில்லை. சுதந்திர நாட்டில் வாழ்பவர்களுக்கு, சுதந்திரத்தின் அருமை புரிவதில்லை. ‘கோவில் பூனை தெய்வத்திற்கு அஞ்சாது‘ என்ற நிலையிலேயே நம்முடைய வாழ்க்கை செல்கிறது.
மானிடர் மீது கொண்ட அன்பின் காரணமாக தன்னையே இந்த உலகிற்கு வழங்கிய இயேசுவின் ஒப்பற்ற தியாக பலியை நினைத்து நன்றி கூறுவோம். அவர் காட்டிய பாதையில் நம் காலடி தடங்களை பதிப்போம்.
அருட்சகோதரி. பேர்ட்டில் ஜான்சிராணி, மரியின் ஊழியர் சபை, திண்டுக்கல்.
ஆனால் உடலில் இருந்து ரத்தம் வெளியேறிய பிறகும், அதற்கு அதே வல்லமை உண்டா? அதிலும் மனிதர்களை தூய்மைப்படுத்தும் அளவிற்கு அந்த ரத்தம் சக்தி பெற்றதா? ஆம். சக்தி பெற்றது தான். அது எப்படி? இயேசு தம்முடைய ரத்தத்தினாலேயே மனித குலத்தை தூய்மைப்படுத்தி, அதை கரை சேர்க்க சித்தமானார். அப்பத்தையும், திராட்சை ரசத்தையும் பகிர்ந்தளித்து “இது என் உடல் - இது என் ரத்தம்“ என்று இயேசு கூறினார். அது வெறும் உருவகமல்ல. அது ஓர் உண்மை.

அந்த உண்மை, இயேசுவினுடைய முழு வாழ்வின் பண்புகளையும் தூய லட்சியத்தையும் அப்படியே சித்தரிப்பதாகும். அது அவைகளின் சாரமும் ஆகும். இயேசுவின் உண்மையான உடல், மெய்யான ரத்தம் இவை இரண்டும் மக்களுக்காக தகனப்பலி ஆகிறது. இவ்விதமாக அவர் தன் ஊனையும், உதிரத்தையும் நமக்கெல்லாம் பங்கிட்டு தந்ததின் மூலம் தம்முடைய உள்ளத்தையே உலகிற்கு (நமக்கு) தந்திருக்கிறார்.
பணம் படைத்த செல்வந்தருக்கு, பணத்தின் அருமை தெரிவதில்லை. பெற்றோரின் பாசத்தால் தாலாட்டப்படும் குழந்தைகளுக்கு, பல தருணங்களில் பெற்றோரின் அருமை தெரிவதில்லை. சுதந்திர நாட்டில் வாழ்பவர்களுக்கு, சுதந்திரத்தின் அருமை புரிவதில்லை. ‘கோவில் பூனை தெய்வத்திற்கு அஞ்சாது‘ என்ற நிலையிலேயே நம்முடைய வாழ்க்கை செல்கிறது.
மானிடர் மீது கொண்ட அன்பின் காரணமாக தன்னையே இந்த உலகிற்கு வழங்கிய இயேசுவின் ஒப்பற்ற தியாக பலியை நினைத்து நன்றி கூறுவோம். அவர் காட்டிய பாதையில் நம் காலடி தடங்களை பதிப்போம்.
அருட்சகோதரி. பேர்ட்டில் ஜான்சிராணி, மரியின் ஊழியர் சபை, திண்டுக்கல்.
Next Story






