என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தவக்கால சிந்தனை: ஜெபிப்போம் ஜெபித்துக்கொண்டே இருப்போம்
Byமாலை மலர்12 April 2017 3:35 AM GMT (Updated: 12 April 2017 3:35 AM GMT)
பாவ சூழல்களிலிருந்து விலகி வாழ்கிறோம் இறுதியாக கடவுளோடு நல்ல உறவை எப்போதும் புதுப்பித்துக் கொள்கிறோம். எனவே ஜெபிப்போம் ஜெபித்துக்கொண்டே இருப்போம்.
மனிதரோடுப்பேசுவது உரையாடல். கடவுளோடு பேசுவது ஜெபம். கடவுளோடு பேசுவோம் பேசிக்கொண்டே இருப்போம். இதற்காக தனி நேரத்தை ஒதுக்கி ஆலயத்திலே இருந்து ஜெபிப்பதை விட, சிறு சிறு வேலைகளை செய்ய முன்னும் பின்னும் கடவுளுக்காக, சமூக நலனுக்காக செய்கிறோம் என்று சிந்திப்பதே சிறந்த ஜெபமாகும்.
கடவுளின் பிரசன்னத்தில் எப்போதும் வேலை செய்வதே சிறந்த ஜெபமாகும். நாம் ஜெபிக்கும்போது நாம் மாறுகிறோம். அதாவது நல்லது செய்ய மாறிக்கொண்டே இருக்கிறோம். தவறுகளிலிருந்து விடுபட நமக்கு ஜெபம் பேரூதவியாக இருக்கிறது. ஏசு தாபோர் மலையில் ஜெபித்துக்கொண்டிருந்த போதுதான் உருமாறினார். ஒவ்வொரு அற்புதத்தையும் ஏசு ஆற்றியபோது ஜெபித்தார்.
இரவிலும் பகலிலும் எந்நேரமும் தனியாக மலைக்கோ அல்லது தொழுகைக் கூடங்களுக்கோ சென்று ஜெபித்ததாக விவிலியம் கூறுகிறது. புனித பவுலடியாரும் “இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் (1 தெச.6:17)” என்கிறார். எனவே ஜெபிப்போம், நமக்காக மட்டுமல்ல பிறருக்காகவும் ஜெபிப்போம். ஜெபத்தின் வழியாக நாம் நம் எதிரிகளையும் வெல்ல முடியும்.
“உங்களைத்துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள் (மத் 5:14)” ஜெபம் ஹீபுரு மொழியில் பலால் என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் மற்றவருக்காக மன்றாடு” என்பதுதான். எனவே நாம் ஜெபிக்கும்போது கடவுளிடமிருந்து பல நன்மைகளைப் பெறுகிறோம்.
எதிரிகளின் வலைகளில் விழாதவாறு பாதுகாக்கப்படுகிறோம். பாவ சூழல்களிலிருந்து விலகி வாழ்கிறோம் இறுதியாக கடவுளோடு நல்ல உறவை எப்போதும் புதுப்பித்துக் கொள்கிறோம். எனவே ஜெபிப்போம் ஜெபித்துக்கொண்டே இருப்போம்.
- அருட்தந்தை.சி.குழந்தை, காணியிருப்பு.
கடவுளின் பிரசன்னத்தில் எப்போதும் வேலை செய்வதே சிறந்த ஜெபமாகும். நாம் ஜெபிக்கும்போது நாம் மாறுகிறோம். அதாவது நல்லது செய்ய மாறிக்கொண்டே இருக்கிறோம். தவறுகளிலிருந்து விடுபட நமக்கு ஜெபம் பேரூதவியாக இருக்கிறது. ஏசு தாபோர் மலையில் ஜெபித்துக்கொண்டிருந்த போதுதான் உருமாறினார். ஒவ்வொரு அற்புதத்தையும் ஏசு ஆற்றியபோது ஜெபித்தார்.
இரவிலும் பகலிலும் எந்நேரமும் தனியாக மலைக்கோ அல்லது தொழுகைக் கூடங்களுக்கோ சென்று ஜெபித்ததாக விவிலியம் கூறுகிறது. புனித பவுலடியாரும் “இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் (1 தெச.6:17)” என்கிறார். எனவே ஜெபிப்போம், நமக்காக மட்டுமல்ல பிறருக்காகவும் ஜெபிப்போம். ஜெபத்தின் வழியாக நாம் நம் எதிரிகளையும் வெல்ல முடியும்.
“உங்களைத்துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள் (மத் 5:14)” ஜெபம் ஹீபுரு மொழியில் பலால் என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் மற்றவருக்காக மன்றாடு” என்பதுதான். எனவே நாம் ஜெபிக்கும்போது கடவுளிடமிருந்து பல நன்மைகளைப் பெறுகிறோம்.
எதிரிகளின் வலைகளில் விழாதவாறு பாதுகாக்கப்படுகிறோம். பாவ சூழல்களிலிருந்து விலகி வாழ்கிறோம் இறுதியாக கடவுளோடு நல்ல உறவை எப்போதும் புதுப்பித்துக் கொள்கிறோம். எனவே ஜெபிப்போம் ஜெபித்துக்கொண்டே இருப்போம்.
- அருட்தந்தை.சி.குழந்தை, காணியிருப்பு.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X