என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித சவேரியார் ஆலய ஆண்டு பெருவிழா: தேர்பவனி நாளை நடக்கிறது
    X

    புனித சவேரியார் ஆலய ஆண்டு பெருவிழா: தேர்பவனி நாளை நடக்கிறது

    உப்பளம் புனித சவேரியார் ஆலய ஆண்டு பெருவிழாவினை முன்னிட்டு விழாவின் 9-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு புனித சவேரியார் ஆடம்பர தேர் பவனி நடக்கிறது.
    புதுவை உப்பளம் புனித பிரான்சிஸ்கு சவேரியார் பங்கு ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆண்டு விழாவையொட்டி தினந்தோறும் காலையில் திருப்பலியும், மாலையில் தேர்பவனியும் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி நடந்தது. தொடர்ந்து இன்று மாலை 5.30 மணிக்கு சிலுவைப்பாதை, தேர்பவனி ஆகியவை நடந்தது.

    விழாவின் 9-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு பங்குதந்தை ஆரோக்கிய நாதன் பெருவிழா திருப்பலி நடத்துகிறார். அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு புதுவை-கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் கூட்டு பாடல் திருப்பலி நடத்துகிறார்.

    இரவு 7 மணிக்கு புனித சவேரியார் ஆடம்பர தேர் பவனி நடக்கிறது. மறுநாள் 13-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலிக்கு பின் கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×