என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விருத்தாசலத்தை அடுத்த கோணான்குப்பம் பெரியநாயகி அன்னை தேவாலயத்தில் ஆடம்பர தேர்பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    விருத்தாசலத்தை அடுத்த கோணான்குப்பம் பெரியநாயகி அன்னை தேவாலயத்தில் ஆடம்பர தேர்பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.

    விருத்தாசலம் பெரியநாயகி அன்னை தேவாலயத்தில் ஆடம்பர தேர்பவனி

    விருத்தாசலம் அருகே கோணான்குப்பத்தில் பெரியநாயகி அன்னை தேவாலயத்தில் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    விருத்தாசலத்தை அடுத்த கோணான்குப்பத்தில் புகழ்பெற்ற பெரியநாயகி அன்னை தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஆடம்பர தேர்பவனி கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில், பெரியநாயகி அன்னை தேவாலயத்தில் கடந்த 14-ந் தேதி ஆடம்பர தேர்பவனி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினமும் தேவாலயத்தில் காலை, மாலை ஆகிய இருவேளைகளும் சிறப்பு திருப்பலி, கூட்டு பிரார்த்தனை, சிலுவை பாதை ஆகியவை நடைபெற்றது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி, அன்று காலை 7.30 மணிக்கு கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

    தொடர்ந்து, இரவு 9 மணி அளவில் பாரம்பரிய முறைப்படி ராஜா வேடம் அணிந்து பாலதண்டாயுதம் தலைமையில் ஊர் மக்கள் ஊர்வலமாக பெரியநாயகி அன்னை தேவாலயத்திற்கு வந்தனர். பின்னர், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரியநாயகி அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதையடுத்து, பாலதண்டாயுதம் ஆடம்பர தேர்பவனியை தொடங்கி வைத்தார்.

    தேர் தேவாலயத்தை சுற்றி வந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தேர்பவனியை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பெரியநாயகி அன்னை ஆலய பங்குதந்தை அருள்தாஸ், உதவி பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×