என் மலர்
ஆன்மிகம்

கேள்விகளுக்கு கதைகளாக விளக்கம் கொடுக்கும் இயேசு
இயேசுவை நோக்கிக் கேள்விகள் வீசப்படும் போதெல்லாம் பெரும்பாலும் கதைகளாலேயே விளக்கம் கொடுப்பார் இயேசு.
மறைநூல் வல்லுனர்களும், குருக்களும் இயேசுவைப் பார்த்து வழக்கம் போல வெறுப்புக் கேள்வியை வீசினார்கள்.
‘இறைவாக்கினர்கள் என்பவர்கள் மிகவும் தூய்மையானவர்கள். அவர்கள் தூய்மை முறைகள் அனைத்தையும் கடைப்பிடிக்கவேண்டும். அதை விடுத்து நீர் பாவிகளோடும், ஒதுக்கப்பட்டவர்களோடும் உணவருந்துவதும், உரையாடுவதும் முறையற்ற செயல்’ என்றார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து இவ்வாறு கூறினார்:
‘ஒரு மேய்ப்பர் இருந்தார். அவருக்கு நூறு ஆடுகள் இருந்தன. அதை அவர் மேய்ச்சலுக்காகக் கூட்டிப் போனார். மேய்ச்சலை முடித்து விட்டு மாலையில் ஆடுகளை திரும்ப ஓட்டி வந்து ஒரு சமநிலப் பரப்பில் தங்க வைத்தார்’.
‘ஆடுகளை எண்ணிப் பார்த்தால், ஒரு ஆட்டைக் காணோம். அவர் என்ன செய்வார்? அந்த தொன்னூற்று ஒன்பது ஆடுகளையும் அங்கேயே பாழ்வெளியில் விட்டு விட்டு, காணாமல் போன ஒரு ஆட்டைத் தேடிப் போக மாட்டாரா?’
‘அதைக் கண்டு பிடித்தபின். ஆஹா... வழி தவறிப் போயிருந்த ஆட்டை கூட்டி வந்து விட்டேன் என்று ஆனந்தப் படமாட்டாரா? அந்த ஆட்டைத் தூக்கித் தோளில் போட்டு விட்டு மற்ற ஆடுகள் இருக்கும் இடத்துக்கு ஆனந்தமாய் ஓடி வர மாட்டாரா?’
இவ்வாறு இயேசு கேட்டதும் ‘வருவான்...’ என்று கூடியிருந்தவர்கள் பதில் சொன்னார்கள்.
‘அதன் பின் அண்டை வீட்டாரையெல்லாம் அழைத்து, வாருங்கள்; என்னோடு மகிழுங்கள். காணாமல் போயிருந்த ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன் என்று சொல்வான் இல்லையா?’
‘ஆமாம். அதற்கென்ன?’
‘அதே போலத்தான், மனம் திரும்பத் தேவையில்லாத தொன்னூற்று ஒன்பது நீதிமான்களை விட, மனம் திரும்பிய ஒரு பாவியைக் குறித்து விண்ணகம் மகிழும்’ என்றார் இயேசு.
‘வழி தவறிய ஆடு என்பவர் மேய்ப்பவனிடமிருந்து விலகிச் சென்றவன். அவனைத் தேடிச்சென்று மேய்ப்பன் மீட்கிறார். பாவம் எனும் முள்ளிடையே நிற்கும் மனிதர்களையும் இப்படித் தேடிச்சென்று மீட்பது தான் எனது பணி’ இயேசு சொன்னார்.
பாவிகளோடு இயேசு பழகுவதற்குக் காரணம் அவர்களுடைய பாவ வாழ்க்கையை சரிசெய்வதற்கே என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால் இயேசுவை எதிர்த்த மதவாதிகளுக்கு இது எரிச்சலைக் கொடுத்தது. அவர்களைப் பொறுத்தவரை பாவிகள் நெருங்குவதற்கு அருகதையற்றவர்கள்.
உண்மையில் தங்களை நீதிமான்கள் என நினைத்த அவர்களே பாவிகள் என்பதை இயேசு மறைமுகமாய் சுட்டிக்காட்டினார். ‘மனம் திரும்பத் தேவையில்லாத நீதிமான்கள்’ என அவர்களைப் பற்றி நகைச்சுவையாய் அவர் குறிப்பிட்டார்.
இயேசு, மீண்டும் ஒரு கதையைச் சொன்னார்-
‘ஒரு பெண்ணிடம் பத்து வெள்ளிக்காசுகள் இருந்தன. அதில் ஒன்று காணாமல் போய்விட்டது. அவள் கவலைப்பட்டாள். போனால் போகட்டும் என விட்டு விடவில்லை. விளக்கைக் கொளுத்தினாள். வீடு முழுவதும் நன்றாகத் தேடினாள். தேடிக் கண்டுபிடித்தபின்பு தான் அவள் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அப்படித் தான் மனம் திரும்பும் ஒரு பாவியைக் குறித்து தூதர்கள் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைவார்கள்’.
‘ஆடு வழிதவறிப் போனபோது அது சத்தமிட்டது. அபயக் குரல் எழுப்பியது. மேய்ப்பன் அதைக் கண்டுபிடித்தார். காசு சத்தம் போடவில்லை. அது தொலைந்து போனதாக அதற்குப் புரியவேயில்லை. பாவத்தில் இருக்கிறோம் என்பதையே உணராத மக்களை அது குறிக்கிறது. அவர்களை இயேசு தேடி வந்து மீட்கிறார்’.
இயேசுவின் இந்தப் போதனைகள் எல்லாம் மறைநூல் அறிஞர்களுக்கு எரிச்சலையே கொடுத்தன.
இயேசு மக்களைப் பார்த்துச் சொன்னார், ‘மறைநூல் அறிஞர்கள் சட்ட நூல்களிலிருந்து எடுத்துச் சொல்வதை நீங்கள் கடைப்பிடியுங்கள், தவறில்லை. ஆனால் அவர் களுடைய செயல்களிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளாதீர்கள். அவர்கள் சொல்வதோடு நிறுத்திக் கொள்வார்கள். எதையும் செய்வதில்லை. மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காகவே அவர்கள் எல்லாவற்றையும் செய் கிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடத்தையும், தொழுகைக் கூடங்களில் முதல் இடத்தையும் விரும்புவார்கள். உங்களில் பெரியவனாக இருக்க விரும்புகிறவன் அனைவருக்கும் தொண்டனாக இருங்கள். தம்மைத் தாமே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தாழ்த்துகிறவனே உயர்த்தப்படுவான்’ என்றார்.
இயேசுவின் இந்த தாக்குதல் மறைநூல் அறிஞர் களுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. இயேசு அசரவில்லை, அவர்கள் பக்கம் திரும்பினார். ‘திருச்சட்டத்தின் முக்கியப் போதனைகளான நீதி, இரக்கம், நம்பிக்கை எல்லாவற்றையும் நீங்கள் காற்றில் பறக்கவிடுகிறீர்கள். கையையும், பாத்திரத்தையும் கழுவுகிறீர்கள். உள்ளமோ இருண்டு கிடக்கிறதே. நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்’ என்றார்.
எதிர்த்தவர்கள் அவ்விடம் விட்டு விலகிச் சென்றனர்.
எத்தனை பெரிய பாவியாய் இருந்தாலும் மனம் திரும்பி தந்தையிடம் வரவேண்டும் என்பதே இயேசுவின் போதனையின் மையமாய் இருந்தது.
‘இறைவாக்கினர்கள் என்பவர்கள் மிகவும் தூய்மையானவர்கள். அவர்கள் தூய்மை முறைகள் அனைத்தையும் கடைப்பிடிக்கவேண்டும். அதை விடுத்து நீர் பாவிகளோடும், ஒதுக்கப்பட்டவர்களோடும் உணவருந்துவதும், உரையாடுவதும் முறையற்ற செயல்’ என்றார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து இவ்வாறு கூறினார்:
‘ஒரு மேய்ப்பர் இருந்தார். அவருக்கு நூறு ஆடுகள் இருந்தன. அதை அவர் மேய்ச்சலுக்காகக் கூட்டிப் போனார். மேய்ச்சலை முடித்து விட்டு மாலையில் ஆடுகளை திரும்ப ஓட்டி வந்து ஒரு சமநிலப் பரப்பில் தங்க வைத்தார்’.
‘ஆடுகளை எண்ணிப் பார்த்தால், ஒரு ஆட்டைக் காணோம். அவர் என்ன செய்வார்? அந்த தொன்னூற்று ஒன்பது ஆடுகளையும் அங்கேயே பாழ்வெளியில் விட்டு விட்டு, காணாமல் போன ஒரு ஆட்டைத் தேடிப் போக மாட்டாரா?’
‘அதைக் கண்டு பிடித்தபின். ஆஹா... வழி தவறிப் போயிருந்த ஆட்டை கூட்டி வந்து விட்டேன் என்று ஆனந்தப் படமாட்டாரா? அந்த ஆட்டைத் தூக்கித் தோளில் போட்டு விட்டு மற்ற ஆடுகள் இருக்கும் இடத்துக்கு ஆனந்தமாய் ஓடி வர மாட்டாரா?’
இவ்வாறு இயேசு கேட்டதும் ‘வருவான்...’ என்று கூடியிருந்தவர்கள் பதில் சொன்னார்கள்.
‘அதன் பின் அண்டை வீட்டாரையெல்லாம் அழைத்து, வாருங்கள்; என்னோடு மகிழுங்கள். காணாமல் போயிருந்த ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன் என்று சொல்வான் இல்லையா?’
‘ஆமாம். அதற்கென்ன?’
‘அதே போலத்தான், மனம் திரும்பத் தேவையில்லாத தொன்னூற்று ஒன்பது நீதிமான்களை விட, மனம் திரும்பிய ஒரு பாவியைக் குறித்து விண்ணகம் மகிழும்’ என்றார் இயேசு.
‘வழி தவறிய ஆடு என்பவர் மேய்ப்பவனிடமிருந்து விலகிச் சென்றவன். அவனைத் தேடிச்சென்று மேய்ப்பன் மீட்கிறார். பாவம் எனும் முள்ளிடையே நிற்கும் மனிதர்களையும் இப்படித் தேடிச்சென்று மீட்பது தான் எனது பணி’ இயேசு சொன்னார்.
பாவிகளோடு இயேசு பழகுவதற்குக் காரணம் அவர்களுடைய பாவ வாழ்க்கையை சரிசெய்வதற்கே என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால் இயேசுவை எதிர்த்த மதவாதிகளுக்கு இது எரிச்சலைக் கொடுத்தது. அவர்களைப் பொறுத்தவரை பாவிகள் நெருங்குவதற்கு அருகதையற்றவர்கள்.
உண்மையில் தங்களை நீதிமான்கள் என நினைத்த அவர்களே பாவிகள் என்பதை இயேசு மறைமுகமாய் சுட்டிக்காட்டினார். ‘மனம் திரும்பத் தேவையில்லாத நீதிமான்கள்’ என அவர்களைப் பற்றி நகைச்சுவையாய் அவர் குறிப்பிட்டார்.
இயேசு, மீண்டும் ஒரு கதையைச் சொன்னார்-
‘ஒரு பெண்ணிடம் பத்து வெள்ளிக்காசுகள் இருந்தன. அதில் ஒன்று காணாமல் போய்விட்டது. அவள் கவலைப்பட்டாள். போனால் போகட்டும் என விட்டு விடவில்லை. விளக்கைக் கொளுத்தினாள். வீடு முழுவதும் நன்றாகத் தேடினாள். தேடிக் கண்டுபிடித்தபின்பு தான் அவள் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அப்படித் தான் மனம் திரும்பும் ஒரு பாவியைக் குறித்து தூதர்கள் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைவார்கள்’.
‘ஆடு வழிதவறிப் போனபோது அது சத்தமிட்டது. அபயக் குரல் எழுப்பியது. மேய்ப்பன் அதைக் கண்டுபிடித்தார். காசு சத்தம் போடவில்லை. அது தொலைந்து போனதாக அதற்குப் புரியவேயில்லை. பாவத்தில் இருக்கிறோம் என்பதையே உணராத மக்களை அது குறிக்கிறது. அவர்களை இயேசு தேடி வந்து மீட்கிறார்’.
இயேசுவின் இந்தப் போதனைகள் எல்லாம் மறைநூல் அறிஞர்களுக்கு எரிச்சலையே கொடுத்தன.
இயேசு மக்களைப் பார்த்துச் சொன்னார், ‘மறைநூல் அறிஞர்கள் சட்ட நூல்களிலிருந்து எடுத்துச் சொல்வதை நீங்கள் கடைப்பிடியுங்கள், தவறில்லை. ஆனால் அவர் களுடைய செயல்களிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளாதீர்கள். அவர்கள் சொல்வதோடு நிறுத்திக் கொள்வார்கள். எதையும் செய்வதில்லை. மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காகவே அவர்கள் எல்லாவற்றையும் செய் கிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடத்தையும், தொழுகைக் கூடங்களில் முதல் இடத்தையும் விரும்புவார்கள். உங்களில் பெரியவனாக இருக்க விரும்புகிறவன் அனைவருக்கும் தொண்டனாக இருங்கள். தம்மைத் தாமே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தாழ்த்துகிறவனே உயர்த்தப்படுவான்’ என்றார்.
இயேசுவின் இந்த தாக்குதல் மறைநூல் அறிஞர் களுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. இயேசு அசரவில்லை, அவர்கள் பக்கம் திரும்பினார். ‘திருச்சட்டத்தின் முக்கியப் போதனைகளான நீதி, இரக்கம், நம்பிக்கை எல்லாவற்றையும் நீங்கள் காற்றில் பறக்கவிடுகிறீர்கள். கையையும், பாத்திரத்தையும் கழுவுகிறீர்கள். உள்ளமோ இருண்டு கிடக்கிறதே. நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்’ என்றார்.
எதிர்த்தவர்கள் அவ்விடம் விட்டு விலகிச் சென்றனர்.
எத்தனை பெரிய பாவியாய் இருந்தாலும் மனம் திரும்பி தந்தையிடம் வரவேண்டும் என்பதே இயேசுவின் போதனையின் மையமாய் இருந்தது.
Next Story






