என் மலர்
ஆன்மிகம்

உன் நம்பிக்கை வீண் போகாது
‘நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண்போகாது’ (நீதி 23:18) என்கிறது விவிலியம்.
நம்பிக்கையற்ற இவ்வுலகில் பலவிதமான போராட்டங்கள் மத்தியில் நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்து வருகிறோம். அதே வேளையில் நம்பிக்கையின் தேவன் உங்களுக்கு அற்புதங்களையும் ஆசீர்வாதங்களையும் கொடுக்க வல்லவர் என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும்.
‘நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண்போகாது’ (நீதி 23:18) என்கிறது விவிலியம்.
நம்பிக்கை என்றால் என்ன?
‘உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்வாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்’ (ரோமர் 4:18).
மேற்கண்ட வசனத்தில் நம்புவதற்கு எவ் விதத்திலும் சாத்தியக்கூறுகள் இல்லாத சூழ்நிலையில் ஆண்டவரை விசுவாசிப்பதுதான் நம்பிக்கை. மேலும், ‘அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல. ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில் அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்’ (ரோமர் 8:24,25).
மேற்கண்ட வசனங்களின்படி இது வரைக்கும் நீங்கள் காணாததை பொறுமையோடு விசுவாசிக்கிறது தான் நம்பிக்கை. ஆகவே, எதிர்மறையான எண்ணங்களுக்கு சாத்தான் உங்களைக் கொண்டு சென்றிருந்தால் உங்கள் சிந்தனையும், இருதயங்களின் எண்ணங்களையும் கிறிஸ்து இயேசுவுக்குள் சிறைப்படுத்தி, இச்செய்தியை ஜெபத்தோடு வாசியுங்கள்.
தேவனை நம்புகிறவர்கள் எப்படி இருப்பார்கள்?
‘அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக் கொண்டு நடந்தான்’ (2 ராஜா 18:6)
தன்னுடைய 25-வது வயதில் எருசலேமில் ராஜாவாகி 29 வருஷம் ஆட்சி நடத்திய ராஜாவாகிய எசேக்கியாவை குறித்து மேற்கண்ட வசனம் தெளிவாக கூறுகிறது.
கர்த்தரை நம்புகிறவர்களின் சுபாவம் எந்த சூழ்நிலையிலும் ஆண்டவரை விட்டு விலக மாட்டார்கள். ஆபத்துக் காலத்தில் ஆண்டவரைத்தேடி ஆசீர்வாதங்களை கண்டடைந்த பிறகு ஆண்டவரை மறந்துபோகிற மக்கள் அநேகராய் இந்நாட்களில் இருக்கிறார்கள். துன்பமும் துயரமும் சிலரை சில நேரங்களில் சூழ்ந்துக் கொள்ளும்போது கர்த்தரை மறந்து மறு தலிக்கிற மக்களும் நம்மிடையே உண்டு.
ஆண்டவராகிய இயேசு ராஜா சிலுவைக்கு செல்வதற்கு முன்பு அவரோடு இருந்த சீடர்கள் அனைவரும் அவரை விட்டு விலகி ஓடினார்கள். ‘பேதுருவோ விலகி ஓட மனதில்லாமல், வைராக்கியமாக அவரோடு நிற்க முடியாமல், இயேசுவுக்கு விரோதமானவர்களோடு அமர்ந்துக் கொண்டு இயேசுவை மறுதலித்தார்’ என (லூக்கா 22:54-60) வசனங்கள் கூறு கிறது.
நம்பிக்கை உடையவர்கள் எந்த நிலைமையிலும் ‘நான் நம்புகிறது கர்த்தாராலே வரும்’ (சங்: 62:5) என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். ஒருநாளும் ஆண்டவரை விட்டு விலக அவரது இருதயம் இடம் கொடுக்காது.
தேவனை சார்ந்த வாழ்க்கை
‘அவன் கர்த்தரை விட்டுப் பின் வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்’ (2 ராஜா 18:6)
கர்த்தரை முழு இருதயத்தோடு நம்புகிறவர் களின் மற்றொரு முக்கிய சுபாவம் எப்போதும், எல்லாவற்றிற்காகவும் ஆண்டவரையே சார்ந் திருப்பார்கள். ஆண்டவர் ஆசீர்வதிப்பார் என்று சொல்வது வேறு, முற்றிலுமாய் அவரையே சார்ந்திருப்பது வேறு. சில வேளைகளில் நம்முடைய இருதயம் ஆண்டவரை நம்புவது போல தெரியும். ஆனால் சிந்தையிலோ எல்லா நம்பிக்கையும் மனுஷனையே சார்ந்து இருக்கும்.
‘மனுஷன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதை தன் புயபலமாக்கிக் கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்’ (எரே 17:5)
மேற்கண்ட வசனத்தில் மனுஷனை நம்புகிறவர்கள் மாம்சத்தை சார்ந்து இருப்பார்கள் என்று வாசிக்கிறோம் அல்லவா? அதாவது உலகப் பிரகாரமான எண்ணங்கள், உலக ஞானம் படிப்பினால் வருகிற பலன், மனுஷனுடைய ஒத்தாசை இவைகள் எல்லாம் மாம்சத்துக்கு உரியவைகளைக் குறிக்கும். ஆனால் கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கிறவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை கீழ்காணும் வசனங்கள் நமக்கு மிகவும் அழகாக எடுத்துக் கூறுகிறது.
‘கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன்வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத் தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்’ (எரே 17:7,8)
எந்த சூழ்நிலையிலும் கர்த்தரையே சார்ந்து வாழப் பழகுங்கள். அவ்வாழ்க்கை உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் சந்ததிக்கே பெருத்த ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும். ஆண்டவரை சார்ந்து வாழும்போது உங்கள் வாழ்க்கை உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். எசேக்கிகயல் ராஜாவை கர்த்தர் ஆசீர்வாதத்திற்கு இது முக்கிய காரணமாகும்.
தேவனை நம்புவதின் ஆசீர்வாதங்கள்
‘அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை’ (2 ராஜா 18:7). எத்தனை ஆசீர்வாதமான வாழ்க்கை. மேலும் ‘கர்த்தர் அவனோடு இருந்தார்’ என்று 2 ராஜா 18:7 சொல்லுகிறது. இதைவிட வேறொரு ஆசீர்வாதம் நமக்கு வேண்டுமா?
எத்தனை கோடி பணம் இருந்தாலும், சரீர பெலன் இருந்தாலும் கர்த்தர் நம்மோடு கூட இருப்பதை போன்ற ஆசீர்வாதம் வித்தியாசம் அல்லவா? எல்லாவற்றிற்கும் மேலாக எசேக்கியா ராஜா செல்லும் இடமெல்லாம் அவன் காரியம் அனுகூலமாயிற்று என்று 2 ராஜா 18:7-ல் வாசிக்கிறோம். எத்தனை பெரிய ஆசீர்வாதம்.
மேற்கண்ட ஆசீர்வாதங்களை வாசித்துக் கொண்டிருக்கிற நீங்கள், நம்புவதற்கு ஏதுவல்லாத அற்புதங்களை இன்று முதல் நம்புங்கள். நீங்கள் நம்புகிற ஆசீர்வாதங்களை வாய்களைத் திறந்து விசுவாச அறிக்கையாகக் கூறுங்கள். நீங்கள் கூறின ஆசீர்வாதங்கள் உங்களிடத்திற்கு வரும்வரை நம்பிக்கையோடு கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள். நம்பிக்கையின் தேவன் தம்முடைய அளவற்ற ஆசீர்வாதங்களால் உங்களை நிரப்பி சந்தோஷப்படுத்துவார்.
சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
‘நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண்போகாது’ (நீதி 23:18) என்கிறது விவிலியம்.
நம்பிக்கை என்றால் என்ன?
‘உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்வாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்’ (ரோமர் 4:18).
மேற்கண்ட வசனத்தில் நம்புவதற்கு எவ் விதத்திலும் சாத்தியக்கூறுகள் இல்லாத சூழ்நிலையில் ஆண்டவரை விசுவாசிப்பதுதான் நம்பிக்கை. மேலும், ‘அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல. ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில் அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்’ (ரோமர் 8:24,25).
மேற்கண்ட வசனங்களின்படி இது வரைக்கும் நீங்கள் காணாததை பொறுமையோடு விசுவாசிக்கிறது தான் நம்பிக்கை. ஆகவே, எதிர்மறையான எண்ணங்களுக்கு சாத்தான் உங்களைக் கொண்டு சென்றிருந்தால் உங்கள் சிந்தனையும், இருதயங்களின் எண்ணங்களையும் கிறிஸ்து இயேசுவுக்குள் சிறைப்படுத்தி, இச்செய்தியை ஜெபத்தோடு வாசியுங்கள்.
தேவனை நம்புகிறவர்கள் எப்படி இருப்பார்கள்?
‘அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக் கொண்டு நடந்தான்’ (2 ராஜா 18:6)
தன்னுடைய 25-வது வயதில் எருசலேமில் ராஜாவாகி 29 வருஷம் ஆட்சி நடத்திய ராஜாவாகிய எசேக்கியாவை குறித்து மேற்கண்ட வசனம் தெளிவாக கூறுகிறது.
கர்த்தரை நம்புகிறவர்களின் சுபாவம் எந்த சூழ்நிலையிலும் ஆண்டவரை விட்டு விலக மாட்டார்கள். ஆபத்துக் காலத்தில் ஆண்டவரைத்தேடி ஆசீர்வாதங்களை கண்டடைந்த பிறகு ஆண்டவரை மறந்துபோகிற மக்கள் அநேகராய் இந்நாட்களில் இருக்கிறார்கள். துன்பமும் துயரமும் சிலரை சில நேரங்களில் சூழ்ந்துக் கொள்ளும்போது கர்த்தரை மறந்து மறு தலிக்கிற மக்களும் நம்மிடையே உண்டு.
ஆண்டவராகிய இயேசு ராஜா சிலுவைக்கு செல்வதற்கு முன்பு அவரோடு இருந்த சீடர்கள் அனைவரும் அவரை விட்டு விலகி ஓடினார்கள். ‘பேதுருவோ விலகி ஓட மனதில்லாமல், வைராக்கியமாக அவரோடு நிற்க முடியாமல், இயேசுவுக்கு விரோதமானவர்களோடு அமர்ந்துக் கொண்டு இயேசுவை மறுதலித்தார்’ என (லூக்கா 22:54-60) வசனங்கள் கூறு கிறது.
நம்பிக்கை உடையவர்கள் எந்த நிலைமையிலும் ‘நான் நம்புகிறது கர்த்தாராலே வரும்’ (சங்: 62:5) என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். ஒருநாளும் ஆண்டவரை விட்டு விலக அவரது இருதயம் இடம் கொடுக்காது.
தேவனை சார்ந்த வாழ்க்கை
‘அவன் கர்த்தரை விட்டுப் பின் வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்’ (2 ராஜா 18:6)
கர்த்தரை முழு இருதயத்தோடு நம்புகிறவர் களின் மற்றொரு முக்கிய சுபாவம் எப்போதும், எல்லாவற்றிற்காகவும் ஆண்டவரையே சார்ந் திருப்பார்கள். ஆண்டவர் ஆசீர்வதிப்பார் என்று சொல்வது வேறு, முற்றிலுமாய் அவரையே சார்ந்திருப்பது வேறு. சில வேளைகளில் நம்முடைய இருதயம் ஆண்டவரை நம்புவது போல தெரியும். ஆனால் சிந்தையிலோ எல்லா நம்பிக்கையும் மனுஷனையே சார்ந்து இருக்கும்.
‘மனுஷன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதை தன் புயபலமாக்கிக் கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்’ (எரே 17:5)
மேற்கண்ட வசனத்தில் மனுஷனை நம்புகிறவர்கள் மாம்சத்தை சார்ந்து இருப்பார்கள் என்று வாசிக்கிறோம் அல்லவா? அதாவது உலகப் பிரகாரமான எண்ணங்கள், உலக ஞானம் படிப்பினால் வருகிற பலன், மனுஷனுடைய ஒத்தாசை இவைகள் எல்லாம் மாம்சத்துக்கு உரியவைகளைக் குறிக்கும். ஆனால் கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கிறவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை கீழ்காணும் வசனங்கள் நமக்கு மிகவும் அழகாக எடுத்துக் கூறுகிறது.
‘கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன்வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத் தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்’ (எரே 17:7,8)
எந்த சூழ்நிலையிலும் கர்த்தரையே சார்ந்து வாழப் பழகுங்கள். அவ்வாழ்க்கை உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் சந்ததிக்கே பெருத்த ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும். ஆண்டவரை சார்ந்து வாழும்போது உங்கள் வாழ்க்கை உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். எசேக்கிகயல் ராஜாவை கர்த்தர் ஆசீர்வாதத்திற்கு இது முக்கிய காரணமாகும்.
தேவனை நம்புவதின் ஆசீர்வாதங்கள்
‘அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை’ (2 ராஜா 18:7). எத்தனை ஆசீர்வாதமான வாழ்க்கை. மேலும் ‘கர்த்தர் அவனோடு இருந்தார்’ என்று 2 ராஜா 18:7 சொல்லுகிறது. இதைவிட வேறொரு ஆசீர்வாதம் நமக்கு வேண்டுமா?
எத்தனை கோடி பணம் இருந்தாலும், சரீர பெலன் இருந்தாலும் கர்த்தர் நம்மோடு கூட இருப்பதை போன்ற ஆசீர்வாதம் வித்தியாசம் அல்லவா? எல்லாவற்றிற்கும் மேலாக எசேக்கியா ராஜா செல்லும் இடமெல்லாம் அவன் காரியம் அனுகூலமாயிற்று என்று 2 ராஜா 18:7-ல் வாசிக்கிறோம். எத்தனை பெரிய ஆசீர்வாதம்.
மேற்கண்ட ஆசீர்வாதங்களை வாசித்துக் கொண்டிருக்கிற நீங்கள், நம்புவதற்கு ஏதுவல்லாத அற்புதங்களை இன்று முதல் நம்புங்கள். நீங்கள் நம்புகிற ஆசீர்வாதங்களை வாய்களைத் திறந்து விசுவாச அறிக்கையாகக் கூறுங்கள். நீங்கள் கூறின ஆசீர்வாதங்கள் உங்களிடத்திற்கு வரும்வரை நம்பிக்கையோடு கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள். நம்பிக்கையின் தேவன் தம்முடைய அளவற்ற ஆசீர்வாதங்களால் உங்களை நிரப்பி சந்தோஷப்படுத்துவார்.
சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
Next Story






