என் மலர்

    ஆன்மிகம்

    தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய விழாவில் தங்க தேரோட்டம்
    X

    தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய விழாவில் தங்க தேரோட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள அதிசய பனிமாதா ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்க தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
    நெல்லை மாவட்டம் வள்ளியூர் தெற்கு கள்ளிகுளத்தில் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான 131-வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் நற்கருணை ஆசிரும் நடந்தது.

    8-ம் நாள் திருவிழா அன்று மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் நற்கருணை பவனி நடந்தது. பங்குத்தந்தை ஜெரால்ட் ரவி மறையுரை வழங்கினார்.

    9-ம் திருவிழா அன்று நள்ளிரவு 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தங்கத்தேரில் எழுந்தருளி, தங்க தேரோட்டம் நடந்தது. தேர் திரளான மக்கள் வெள்ளத்தில் வீதி உலா வந்தது.



    பின்பு தக்கலை மறை மாவட்ட பிஷப் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. 10-ம் திருவிழாவான நேற்று கூட்டுத் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான்சன்ராஜ், உதவி பங்குத்தந்தை ராயப்பன், தர்மகர்த்தாவும் தெற்குகள்ளிகுளம் பஞ்சாயத்து தலைவருமான ஆனந்தராஜா மற்றும் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாககுழு உறுப்பினர்கள், இறை மக்கள் செய்து இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலாஜி தலைமையில் போலீஸ் அதிகாரிகள் செய்திருந்தனர்.
    Next Story
    ×