என் மலர்
ஆன்மிகம்

மன்னிப்பின் மகத்துவத்தை பற்றி சீடர்களிடம் இயேசுவின் உரையாடல்
பிறரை மன்னிக்காதவர்களின் பாவங்களை இறைவன் மன்னிப்பதில்லை. பாவங்கள் மன்னிக்கப்படாதவன் விண்ணகம் செல்வதில்லை.
மன்னிப்பின் மகத்துவத்தைப் பற்றி சீடர்களிடம் இயேசு உரையாடிக் கொண்டிருக்கையில், சீடர் பேதுரு இயேசுவிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.
‘இயேசுவே, என்னுடைய சகோதரனோ, சகோதரியோ எனக்கு எதிராகத் தொடர்ந்து பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை மன்னிப்பது? ஏழு முறையா?’.
ஏழு என்பது கடவுளுக்குரியது என்றும், முழுமையைக் குறிப்பது என்றும் யூதர்கள் நம்பினார்கள். எனவே தான் பேதுரு அப்படிக் கேட்டார்.
இயேசு அவரிடம், ‘ஏழு முறை மட்டுமல்ல. எழுபது தடவை ஏழு முறை நீ அவனை மன்னிக்க வேண்டும்’ என்றார்.
அத்தனை முறை மன்னிப்புப் பெற்றவன் தொடர்ந்து பாவங்கள் செய்வதை விட்டு விடுவான். எல்லாவற்றுக்கும் மேலாய், அத்தனை முறை மன்னித்துவிட்டால் அதன்பின் மன்னிப்பது மனிதனுக்குப் பழக்கமாகிவிடும்.
இயேசு தொடர்ந்து பேசினார்:
ஒரு அரசன் இருந்தான். அவன் சற்று நேர்மையானவன் மக்களின் இக்கட்டான நேரங்களில் அவர்களுக்குத் தேவையான பண உதவிகளை அளிப்பது அவனுடைய வழக்கம். ஒருமுறை அவன் தன்னுடைய பணியாளனை அழைத்து, யாரெல்லாம் தன்னிடம் கடன் வாங்கி இருக்கிறார்கள். யாரெல்லாம் அதை நேர்மையாக திருப்பிக் கட்டிஇருக்கிறார்கள், யார் யார் அதை சரியாகக் கட்டாமல் இழுத்தடிக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கச் சொன்னான்.
பணியாளன் ஏடுகளைப் புரட்டி கணக்கு பார்க்கத் தொடங்கினான்.
‘அரசே, ஒரு பணியாளன் உம்மிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்டு பல வருடங்களாகிறது. இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை’ பணியாளன் சொன்னான்.
‘உடனே அவனை இங்கே அழைத்துவாருங்கள்’ மன்னன் ஆணையிட்டான்.
கடன் பட்ட அந்த மனிதர் மன்னனின் முன்னிலையில் இழுத்து வரப்பட்டான்.
‘என்னிடம் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாமல் என்னை ஏமாற்றுகிறாயா?’ மன்னன் கர்ஜித்தான்.
‘அரசே, உம்மை ஏமாற்றும் எண்ணம் எனக்குச் சிறிதும் இல்லை. என்னால் கடனை திருப்பிக் கட்ட இயலாத நிலை. வறுமையில் உழல்கிறேன்’ கடன் பட்டவன் பணிந்தான்.
‘உம்முடைய சொத்துக்களையெல்லாம் பறிமுதல் செய்வேன்’ அரசன் சொன்னான்.
‘அரசே எனக்கு சொத்துக்கள் என்று எதுவுமே இல்லை’
‘இருக்கும் சொத்துக்களையும், உன் மனைவி பிள்ளைகளையும் விற்று என்னுடைய கடனை நீ திரும்பச் செலுத்த வேண்டும்’ என்று மன்னன் கத்தினான்.
கடனாளி அதிர்ந்து போனான். அவன் மன்னனின் காலில் விழுந்து, ‘அரசே.. நீர் எனக்கு இரக்கம் காட்ட வேண்டும். உம்முடைய கருணைக் கண்ணை என்மீது வைத்து என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு இருப்பதே என் மனைவியும், பிள்ளைகளும் தான். அவர்களும் இல்லையென்றால் நான் சாவதைத் தவிர வேறு வழியே இல்லை. என்னை மன்னியுங்கள். என் கடனை மன்னியுங்கள்’ என்று கதறினான்.
மன்னன் மனமிரங்கினான்.
‘சரி.. நீ போ.. உன்னுடைய அனைத்துக் கடன்களையும் நான் தள்ளுபடி செய்கிறேன்’ மன்னன் சொல்ல, கடன்பட்டவன் கண்களில் கண்ணீர் பனிக்க நன்றி சொன்னான்.
அரசனுடைய முன்னிலையிலிருந்து வெளியே வந்தான். அவனுக்கு எதிரே அவனிடம் நூறு தெனாரியம் கடன்பட்டவன் வந்து கொண்டிருந்தான்.
நூறு தெனாரியம் என்பது மிகவும் குறைந்த தொகை. ஒரு தாலந்து ஐம்பது கிலோ தங்கம் என்றால், ஒரு தெனாரியம் என்பது ஆறு கிராம் வெள்ளி என்பது தோராயக் கணக்கு.
‘ஏய்.. என்னுடைய நூறு தெனாரியங்கள் எங்கே? வாங்கிப் போய் பல நாட்களாகிறதே’ மன்னனிடம் மன்னிப்பைப் பெற்ற அந்த மனிதன் கர்ஜித்தான்.
‘ஐயா, மன்னியுங்கள். விரைவிலேயே கொடுத்துவிடுகிறேன்’ அவன் கெஞ்சினான்.
தன்னுடைய பத்தாயிரம் தாலந்துக் கடனை மன்னன் மன்னித்ததுபோல, இந்த மனிதனுடைய நூறு தெனாரியம் கடனை மன்னிக்க இவன் விரும்பவில்லை. அவனுடைய கழுத்தைப் பிடித்து கீழே தள்ளி, அடித்துத் துவைத்து, அவனை தன்னுடைய அதிகாரத்தின் கீழ் சிறையில் அடைத்தான்.
சக ஊழியர்கள் இதைக் கண்டபோது மிகவும் வருந்தினர். மன்னனிடம் சென்று விஷயத்தைச் சொன்னார்கள். மன்னன் அதிர்ந்தான்.
‘உடனே அவனை இங்கே இழுத்து வாருங்கள்’ என்று ஆணையிட்டான். அவன் இழுத்து வரப்பட்டான்.
‘பொல்லாதவனே... உன்னுடைய பத்தாயிரம் தாலந்தை நான் மன்னித்தேனே. அதே போல நீயும் அவனுடைய நூறு தெனாரியம் கடனை மன்னித்திருக்கலாமே’ என்று சொல்லி அவனை சிறையில் அடைத்து, வதைப்போனிடம் ஒப்படைத்தார்.
இவ்வாறு தாலந்து கடன்பட்டவனின் கதையை இயேசு விளக்கினார்.
பிறரை மன்னிக்காதவர்களின் பாவங்களை இறைவன் மன்னிப்பதில்லை. பாவங்கள் மன்னிக்கப்படாதவன் விண்ணகம் செல்வதில்லை. சுருங்கச் சொன்னால், விண்ணக வாழ்வுக்கு நுழைய விரும்பினால் பிறரை மன்னிக்கத் தயங்கவே கூடாது.
‘இயேசுவே, என்னுடைய சகோதரனோ, சகோதரியோ எனக்கு எதிராகத் தொடர்ந்து பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை மன்னிப்பது? ஏழு முறையா?’.
ஏழு என்பது கடவுளுக்குரியது என்றும், முழுமையைக் குறிப்பது என்றும் யூதர்கள் நம்பினார்கள். எனவே தான் பேதுரு அப்படிக் கேட்டார்.
இயேசு அவரிடம், ‘ஏழு முறை மட்டுமல்ல. எழுபது தடவை ஏழு முறை நீ அவனை மன்னிக்க வேண்டும்’ என்றார்.
அத்தனை முறை மன்னிப்புப் பெற்றவன் தொடர்ந்து பாவங்கள் செய்வதை விட்டு விடுவான். எல்லாவற்றுக்கும் மேலாய், அத்தனை முறை மன்னித்துவிட்டால் அதன்பின் மன்னிப்பது மனிதனுக்குப் பழக்கமாகிவிடும்.
இயேசு தொடர்ந்து பேசினார்:
ஒரு அரசன் இருந்தான். அவன் சற்று நேர்மையானவன் மக்களின் இக்கட்டான நேரங்களில் அவர்களுக்குத் தேவையான பண உதவிகளை அளிப்பது அவனுடைய வழக்கம். ஒருமுறை அவன் தன்னுடைய பணியாளனை அழைத்து, யாரெல்லாம் தன்னிடம் கடன் வாங்கி இருக்கிறார்கள். யாரெல்லாம் அதை நேர்மையாக திருப்பிக் கட்டிஇருக்கிறார்கள், யார் யார் அதை சரியாகக் கட்டாமல் இழுத்தடிக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கச் சொன்னான்.
பணியாளன் ஏடுகளைப் புரட்டி கணக்கு பார்க்கத் தொடங்கினான்.
‘அரசே, ஒரு பணியாளன் உம்மிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்டு பல வருடங்களாகிறது. இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை’ பணியாளன் சொன்னான்.
‘உடனே அவனை இங்கே அழைத்துவாருங்கள்’ மன்னன் ஆணையிட்டான்.
கடன் பட்ட அந்த மனிதர் மன்னனின் முன்னிலையில் இழுத்து வரப்பட்டான்.
‘என்னிடம் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாமல் என்னை ஏமாற்றுகிறாயா?’ மன்னன் கர்ஜித்தான்.
‘அரசே, உம்மை ஏமாற்றும் எண்ணம் எனக்குச் சிறிதும் இல்லை. என்னால் கடனை திருப்பிக் கட்ட இயலாத நிலை. வறுமையில் உழல்கிறேன்’ கடன் பட்டவன் பணிந்தான்.
‘உம்முடைய சொத்துக்களையெல்லாம் பறிமுதல் செய்வேன்’ அரசன் சொன்னான்.
‘அரசே எனக்கு சொத்துக்கள் என்று எதுவுமே இல்லை’
‘இருக்கும் சொத்துக்களையும், உன் மனைவி பிள்ளைகளையும் விற்று என்னுடைய கடனை நீ திரும்பச் செலுத்த வேண்டும்’ என்று மன்னன் கத்தினான்.
கடனாளி அதிர்ந்து போனான். அவன் மன்னனின் காலில் விழுந்து, ‘அரசே.. நீர் எனக்கு இரக்கம் காட்ட வேண்டும். உம்முடைய கருணைக் கண்ணை என்மீது வைத்து என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு இருப்பதே என் மனைவியும், பிள்ளைகளும் தான். அவர்களும் இல்லையென்றால் நான் சாவதைத் தவிர வேறு வழியே இல்லை. என்னை மன்னியுங்கள். என் கடனை மன்னியுங்கள்’ என்று கதறினான்.
மன்னன் மனமிரங்கினான்.
‘சரி.. நீ போ.. உன்னுடைய அனைத்துக் கடன்களையும் நான் தள்ளுபடி செய்கிறேன்’ மன்னன் சொல்ல, கடன்பட்டவன் கண்களில் கண்ணீர் பனிக்க நன்றி சொன்னான்.
அரசனுடைய முன்னிலையிலிருந்து வெளியே வந்தான். அவனுக்கு எதிரே அவனிடம் நூறு தெனாரியம் கடன்பட்டவன் வந்து கொண்டிருந்தான்.
நூறு தெனாரியம் என்பது மிகவும் குறைந்த தொகை. ஒரு தாலந்து ஐம்பது கிலோ தங்கம் என்றால், ஒரு தெனாரியம் என்பது ஆறு கிராம் வெள்ளி என்பது தோராயக் கணக்கு.
‘ஏய்.. என்னுடைய நூறு தெனாரியங்கள் எங்கே? வாங்கிப் போய் பல நாட்களாகிறதே’ மன்னனிடம் மன்னிப்பைப் பெற்ற அந்த மனிதன் கர்ஜித்தான்.
‘ஐயா, மன்னியுங்கள். விரைவிலேயே கொடுத்துவிடுகிறேன்’ அவன் கெஞ்சினான்.
தன்னுடைய பத்தாயிரம் தாலந்துக் கடனை மன்னன் மன்னித்ததுபோல, இந்த மனிதனுடைய நூறு தெனாரியம் கடனை மன்னிக்க இவன் விரும்பவில்லை. அவனுடைய கழுத்தைப் பிடித்து கீழே தள்ளி, அடித்துத் துவைத்து, அவனை தன்னுடைய அதிகாரத்தின் கீழ் சிறையில் அடைத்தான்.
சக ஊழியர்கள் இதைக் கண்டபோது மிகவும் வருந்தினர். மன்னனிடம் சென்று விஷயத்தைச் சொன்னார்கள். மன்னன் அதிர்ந்தான்.
‘உடனே அவனை இங்கே இழுத்து வாருங்கள்’ என்று ஆணையிட்டான். அவன் இழுத்து வரப்பட்டான்.
‘பொல்லாதவனே... உன்னுடைய பத்தாயிரம் தாலந்தை நான் மன்னித்தேனே. அதே போல நீயும் அவனுடைய நூறு தெனாரியம் கடனை மன்னித்திருக்கலாமே’ என்று சொல்லி அவனை சிறையில் அடைத்து, வதைப்போனிடம் ஒப்படைத்தார்.
இவ்வாறு தாலந்து கடன்பட்டவனின் கதையை இயேசு விளக்கினார்.
பிறரை மன்னிக்காதவர்களின் பாவங்களை இறைவன் மன்னிப்பதில்லை. பாவங்கள் மன்னிக்கப்படாதவன் விண்ணகம் செல்வதில்லை. சுருங்கச் சொன்னால், விண்ணக வாழ்வுக்கு நுழைய விரும்பினால் பிறரை மன்னிக்கத் தயங்கவே கூடாது.
Next Story






