என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசுவின் விரிவான மாலை வழிபாடு
    X

    இயேசுவின் விரிவான மாலை வழிபாடு

    நான் இன்று செய்த பாவங்களெல்லாம் என் நினைவிற்கு வரவும், அவைகளுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்படவும் உம்முடைய உதவியை அளித்தருளும் சுவாமி.
    பரிசுத்த ஆவியை நோக்கி

    தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
    வானின்றுமது பேரொளியின்
    அருட்சுடர் எம்மீ தனுப்பிடுவீர்.

    எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
    நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்,
    இருதய ஒளியே வந்தருள்வீர்.

    உன்னத ஆறுத லானவரே,
    ஆன்ம இனிய விருந்தினரே,
    இனிய தன்மையும் தருபவரே,

    உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
    வெம்மை தணிக்கும் குளிர்நிழலே,
    அழுகையில் ஆறுத லானவரே,,

    உன்னத பேரின்ப ஒளியே,
    உம்மை விசுவசிப் போருடைய
    நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

    உமதருள் ஆற்றல் இல்லாமல்
    உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
    நல்லது அவனில் ஏதுமில்லை.

    மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
    வரட்சி யுற்றதை நனைத்திடுவீர்.
    காயப் பட்டதை ஆற்றிடுவீர்.

    வணங்கா திருப்பதை வளைத்திடுவீர்,
    குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
    தவறிப் போனதை ஆண்டருள்வீர்.

    இறைவா, உம்மை விசுவசித்து,
    உம்மை நம்பும் அடியார்க்குக்
    கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

    புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்.
    இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்.
    அழிவிலா இன்பம் அருள்வீரே.

    ஆமென்.

    Next Story
    ×