என் மலர்
ஆன்மிகம்

சந்தனமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புனித சந்தன மாதா ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காரைக்கால் மாவட்டம் பிள்ளைத்தெரு வாசல் கிராமத்தில் உள்ள புனித சந்தன மாதா ஆலயத்தில் ஆண்டு தோறும் புனித சந்தனமாதா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக சந்தன மாதா கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டதும் மாலை 6 மணியளவில் ஆலயம் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது. விழாவில் பங்குத் தந்தையர்கள், அருட்கன்னியர்கள், இளைஞர் மற்றும் மாதர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் இன்று (திங்கட் கிழமை) மாலை 6 மணிக்கு திருப்பலியும், சிறிய தேர்பவனியும் அதனை தொடர்ந்து நற்செய்தி ஜெபக்கூட்டமும் நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு திருவிழா திருப்பலியும், அதனை தொடர்ந்து மின்விளக்கு அலங்கார தேர்பவனியும் நடைபெறுகிறது. 27-ந் தேதி (புதன்கிழமை) அன்று காலை 6-30 மணிக்கு திருப்பலியும், தொடர்ந்து கொடி இறக்கமும் நடைபெறுகிறது.
முன்னதாக சந்தன மாதா கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டதும் மாலை 6 மணியளவில் ஆலயம் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது. விழாவில் பங்குத் தந்தையர்கள், அருட்கன்னியர்கள், இளைஞர் மற்றும் மாதர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் இன்று (திங்கட் கிழமை) மாலை 6 மணிக்கு திருப்பலியும், சிறிய தேர்பவனியும் அதனை தொடர்ந்து நற்செய்தி ஜெபக்கூட்டமும் நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு திருவிழா திருப்பலியும், அதனை தொடர்ந்து மின்விளக்கு அலங்கார தேர்பவனியும் நடைபெறுகிறது. 27-ந் தேதி (புதன்கிழமை) அன்று காலை 6-30 மணிக்கு திருப்பலியும், தொடர்ந்து கொடி இறக்கமும் நடைபெறுகிறது.
Next Story






