என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    நாலாங்கட்டளை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    பாளைமறை மாவட்டத்தின் 51-வது பங்கு நாலாங்கட்டளை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இத்திருவிழா வருகிற 31-ந்தேதி வரை நடக்கிறது. 19-ந்தேதி காலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. வருகிற 24-ந்தேதி நற்செய்தி பெருவிழா, ஒப்புரவு அருட்சாதனம், சிறப்பு திருப்பலி, அசன விருந்து மற்றும் கலைநிகழ்ச்சிகள், பாடல்-விவிலிய போட்டிகள் நடக்கிறது.

    25-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு மாலை நேர வகுப்பு மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து வருகிற 26,27,28 ஆகிய தேதிகளில் தினமும் இரவு 8 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    29-ந் தேதி மாலை 6 மணிக்கு திருப்பலி, நற்கருணை பவனி மற்றும் புனித அந்தோணியார் இளைஞர்கள் இயக்கம் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 30-ந்தேதி மாலை 6 மணிக்கு கூட்டு திருப்பலியும், இரவு 9 மணிக்கு புனிதரின் திருவுருவ பவனியும் நடக்கிறது.

    31-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு திருவிழா திருப்பலி, திருமுழுக்கு, புதுநன்மை நடக்கிறது. மதியம் 2 மணிக்கு புனிதரின் திருவுருவ பவனி நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசிரை தொடர்ந்து கலைநிகழ்ச்சியுடன் கொடியிறக்கம் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை நாலாங்கட்டளை பங்கு தந்தை ஜெகன் ராஜா மற்றும் இறைமக்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×