என் மலர்
ஆன்மிகம்

கர்த்தர் தரும் ஆசீர்வாதம்
வேத வசனங்களை வாசித்து தியானிக்கும் போதும், தேவ செய்திகளைக் கேட்கும்போதும் வசனத்தின் மூலமாக ஆண்டவர் அதிகமாக நம்மோடு பேசுவது வழக்கம்.
பலவிதங்களில் ஆண்டவர் நம் ஒவ்வொருவரோடும் பேசி வருகிறார். குறிப்பாக வேத வசனங்களை வாசித்து தியானிக்கும் போதும், தேவ செய்திகளைக் கேட்கும்போதும் வசனத்தின் மூலமாக ஆண்டவர் அதிகமாக நம்மோடு பேசுவது வழக்கம்.
இந்நாட்களில் பொருளாதாரத்தில் நமது பாரத தேசம் பலவிதமான இன்னல்களையும், சவால்களையும் சந்தித்து வருகிறது. அமெரிக்கா டாலரை இந்திய பணத்தில் கணக்கிட்டு பார்க்கும் போது வரலாறு காணாத அளவுக்கு இந்திய ரூபாய் வீழ்ச்சியடைந்து கொண்டு போகிறது. மறுபக்கம் எல்லா பொருட்களும் எண்ணி பார்க்க முடியாத அளவுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் எல்லா தரப்பு மக்களும் பலவிதங்களில் பாதிக்கப்பட்டு வருவது நாம் எல்லாரும் அறிந்ததே. இச்சூழ்நிலையில், ‘ஆண்டவர் எங்களுடைய பொருளாதார நிலைமையை மாற்றி அமைப்பாரா? தரித்திரங்களை மாற்றி ஆசீர்வாதங்களை ஆண்டவர் எப்போது தருவார்?’ என்றெல்லாம் உங்கள் உள்ளத்தில் பலவிதமான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கலாம்.
ஆண்டவர் உங்களுடைய கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்து உங்களை ஆசீர்வதிப்பார்.
உற்சாகமாய் கொடுங்கள்
‘அவள் போய் எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும் இவனும் அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்’ (1. இராஜா.17:15)
இச்செய்தியை நீங்கள் வாசிக்கும்போது முடிந்தால் 1.இராஜா. 17-ம் அதிகாரம் முழுவதையும் வாசித்துப் பாருங்கள். ‘ஒன்றுமில்லாதவர்களை எல்லாம் உடையவர்களாய் நம் ஆண்டவர் மாற்றுவார்’ என்பதற்கு இவ்வதிகாரம் ஒரு நல்ல உதாரணம் ஆகும்.
சாறிபாத் என்ற ஊர் பஞ்சத்திலும், வறுமையிலும் தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் தேவ மனிதனாகிய எலியாவை ஆண்டவர் அவ்வூருக்கு அனுப்பினார். அவ்வூரில் ஒரு ஏழை விதவை சில விறகுகளைப் பொறுக்கி கொஞ்சம் மாவை வைத்து சாப்பிட்டு தானும் தன்னுடைய மகனும் மரிக்க வேண்டும் என்ற எண்ணமுடைய அவ்விதவையை தேவ மனிதன் சந்தித்தார்.
அவ்விதவையின் வாழ்க்கையில் ஐசுவரியத்தைக் கொடுக்க, ஆண்டவர் சித்தம் கொண்டார். ஆனால் அவளுக்கோ தேவசித்தம் இன்னதென்று தெரியாது. அவளை செழிப்பாக்க ஆண்டவர் விரும்பினபோதுதான் தேவ மனிதனை அவளிடத்திற்கு ஆண்டவர் அனுப்பினார்.
“இப்பொழுது எலியா அவளைப் பார்த்து, ‘பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம். கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத் தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்’ என்றான். (1 இராஜா.17:13,14)
மேற்கண்ட வசனத்தின்படி எலியா சொன்னதை அந்த ஏழை விதவை உடனே செய்தாள். இச்செய்தியை வாசிக்கிற தேவபிள்ளையே! உங்கள் கடன் பிரச்சினைகளையும், தரித்திரங்களையும் ஆண்டவர் மாற்றுவார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தும், செழிப்பை இன்று வரைக்கும் நீங்கள் காணாமல் இருந்தால், உங்கள் குறைவுகளை பொருட்படுத்தாமல் தேவனுக்குக் கொடுக்கிற காரியத்தில் உங்கள் இருதயம் உற்சாகம் கொள்ளட்டும்.
தன்னுடைய குறையை அவள் பெரிதாக எண்ணியிருந்தால் நிச்சயம் எலியாவின் விருப்பத்தை அவள் நிறைவேற்றியிருக்கமாட்டாள். தன்னுடைய குறைவை விட, தேவமனிதனின் குறைவை அவள் பெரிதாக எண்ணி விசுவாசத்தோடு கர்த்தருடைய ஊழியக்காரனை போஷித்தபடியினால் அவளும், அவளுடைய மகனும் எல்லாவற்றிற்கும் மேலாக அவளுடைய வீட்டாரும் அநேக நாள் சாப்பிடக்கூடிய அளவுக்கு நிரம்பி வழியும் செழிப்பை தேவன் கட்டளையிட்டார்.
தேசத்தில் பஞ்சம், வறுமை, கடன், கஷ்டம், விலைவாசி உயர்வு சகலமும் இருக்கலாம். ஆனால் அவரை நம்பி கர்த்தருடைய ராஜ்ஜியத்திற்கு உற்சாகமாய்க் கொடுத்தால் நிச்சயம் நீங்கள் வறுமையில் இருப்பதில்லை.
உங்களை சுற்றியிருக்கிற தற்கால சூழ்நிலையைப் பார்க்காமல் இனி உங்களை ஆசீர்வதிக்கும் ஆண்டவரை நம்பிக்கையோடு பார்த்து விசுவாசத்தோடு உங்கள் அன்பின் காணிக்கையை கர்த்தருக்கு கொடுங்கள். நிரம்பி வழியும் ஆசீர்வாதங்கள் உங்களிடத்தில் வந்து சேரும்.
ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.
இந்நாட்களில் பொருளாதாரத்தில் நமது பாரத தேசம் பலவிதமான இன்னல்களையும், சவால்களையும் சந்தித்து வருகிறது. அமெரிக்கா டாலரை இந்திய பணத்தில் கணக்கிட்டு பார்க்கும் போது வரலாறு காணாத அளவுக்கு இந்திய ரூபாய் வீழ்ச்சியடைந்து கொண்டு போகிறது. மறுபக்கம் எல்லா பொருட்களும் எண்ணி பார்க்க முடியாத அளவுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் எல்லா தரப்பு மக்களும் பலவிதங்களில் பாதிக்கப்பட்டு வருவது நாம் எல்லாரும் அறிந்ததே. இச்சூழ்நிலையில், ‘ஆண்டவர் எங்களுடைய பொருளாதார நிலைமையை மாற்றி அமைப்பாரா? தரித்திரங்களை மாற்றி ஆசீர்வாதங்களை ஆண்டவர் எப்போது தருவார்?’ என்றெல்லாம் உங்கள் உள்ளத்தில் பலவிதமான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கலாம்.
ஆண்டவர் உங்களுடைய கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்து உங்களை ஆசீர்வதிப்பார்.
உற்சாகமாய் கொடுங்கள்
‘அவள் போய் எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும் இவனும் அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்’ (1. இராஜா.17:15)
இச்செய்தியை நீங்கள் வாசிக்கும்போது முடிந்தால் 1.இராஜா. 17-ம் அதிகாரம் முழுவதையும் வாசித்துப் பாருங்கள். ‘ஒன்றுமில்லாதவர்களை எல்லாம் உடையவர்களாய் நம் ஆண்டவர் மாற்றுவார்’ என்பதற்கு இவ்வதிகாரம் ஒரு நல்ல உதாரணம் ஆகும்.
சாறிபாத் என்ற ஊர் பஞ்சத்திலும், வறுமையிலும் தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் தேவ மனிதனாகிய எலியாவை ஆண்டவர் அவ்வூருக்கு அனுப்பினார். அவ்வூரில் ஒரு ஏழை விதவை சில விறகுகளைப் பொறுக்கி கொஞ்சம் மாவை வைத்து சாப்பிட்டு தானும் தன்னுடைய மகனும் மரிக்க வேண்டும் என்ற எண்ணமுடைய அவ்விதவையை தேவ மனிதன் சந்தித்தார்.
அவ்விதவையின் வாழ்க்கையில் ஐசுவரியத்தைக் கொடுக்க, ஆண்டவர் சித்தம் கொண்டார். ஆனால் அவளுக்கோ தேவசித்தம் இன்னதென்று தெரியாது. அவளை செழிப்பாக்க ஆண்டவர் விரும்பினபோதுதான் தேவ மனிதனை அவளிடத்திற்கு ஆண்டவர் அனுப்பினார்.
“இப்பொழுது எலியா அவளைப் பார்த்து, ‘பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம். கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத் தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்’ என்றான். (1 இராஜா.17:13,14)
மேற்கண்ட வசனத்தின்படி எலியா சொன்னதை அந்த ஏழை விதவை உடனே செய்தாள். இச்செய்தியை வாசிக்கிற தேவபிள்ளையே! உங்கள் கடன் பிரச்சினைகளையும், தரித்திரங்களையும் ஆண்டவர் மாற்றுவார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தும், செழிப்பை இன்று வரைக்கும் நீங்கள் காணாமல் இருந்தால், உங்கள் குறைவுகளை பொருட்படுத்தாமல் தேவனுக்குக் கொடுக்கிற காரியத்தில் உங்கள் இருதயம் உற்சாகம் கொள்ளட்டும்.
தன்னுடைய குறையை அவள் பெரிதாக எண்ணியிருந்தால் நிச்சயம் எலியாவின் விருப்பத்தை அவள் நிறைவேற்றியிருக்கமாட்டாள். தன்னுடைய குறைவை விட, தேவமனிதனின் குறைவை அவள் பெரிதாக எண்ணி விசுவாசத்தோடு கர்த்தருடைய ஊழியக்காரனை போஷித்தபடியினால் அவளும், அவளுடைய மகனும் எல்லாவற்றிற்கும் மேலாக அவளுடைய வீட்டாரும் அநேக நாள் சாப்பிடக்கூடிய அளவுக்கு நிரம்பி வழியும் செழிப்பை தேவன் கட்டளையிட்டார்.
தேசத்தில் பஞ்சம், வறுமை, கடன், கஷ்டம், விலைவாசி உயர்வு சகலமும் இருக்கலாம். ஆனால் அவரை நம்பி கர்த்தருடைய ராஜ்ஜியத்திற்கு உற்சாகமாய்க் கொடுத்தால் நிச்சயம் நீங்கள் வறுமையில் இருப்பதில்லை.
உங்களை சுற்றியிருக்கிற தற்கால சூழ்நிலையைப் பார்க்காமல் இனி உங்களை ஆசீர்வதிக்கும் ஆண்டவரை நம்பிக்கையோடு பார்த்து விசுவாசத்தோடு உங்கள் அன்பின் காணிக்கையை கர்த்தருக்கு கொடுங்கள். நிரம்பி வழியும் ஆசீர்வாதங்கள் உங்களிடத்தில் வந்து சேரும்.
ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.
Next Story






