என் மலர்
ஆன்மிகம்

பெற்றோருக்கு கீழ்படியுங்கள்
புகை, மது போன்ற தவறான பழக்கங்களை விட்டுவிட்டு பெற்றோருக்கு கீழ்படிந்து வாழுங்கள்.
கீழ்படிதல் பற்றி விவிலியத்தில் தேடினால்.. இயேசுவின் கானா ஊர் திருமணம் தான் நினைவுக்கு வரும்...
‘அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யுங்கள்’
நாசரேத்திலிருந்து 13 கி.மீ. தூரத்திலிருந்த கானா என்ற ஊருக்கு, தம் குடும்பத்தாரோடும், சீடர்களோடும் ஒரு திருமண விருந்திற்குச் சென்றார், இயேசு. விருந்தில் ஏதோ சலசலப்பு இருப்பதை மரியாள் புரிந்துகொண்டார். விருந்தினர்களுக்கு கொடுக்க இருந்த திராட்சை ரசம் தீர்ந்துவிட்டதால் திருமண வீட்டார் பர பரப்பாக இருந்ததைப் பார்த்தார். அந்த காலத்தில், இதுபோன்ற சம்பவங்கள் திருமண வீட்டாருக்குப் பெரிய அவமானமாக அமைந்து விடும். மரியாளுக்கு அது கஷ்டமாக இருந்ததால், உதவிக்காக இயேசுவிடம் சென்றார்.
‘பரிமாறுவதற்கு அவர்களிடம் திராட்சை ரசம் இல்லை’ என்று இயேசுவிடம் சொன்னார். அதற்கு இயேசு, ‘பெண்மணியே! நீங்கள் சொல்லி நான் செய்ய வேண்டுமா?’ என்று பதிலளித்தார். அவருடைய வார்த்தைகள் மரியாதைக்குறைவாக இல்லாத போதிலும் அது மரியாளுக்கு ஆச்சரியமாக இருந்தது. மரியாளை இயேசு மென்மையாகக் கண்டித்தார். தம்முடைய ஊழியம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி தம் பரலோகபிதா யெகோவாவே தீர்மானிப்பார் என்பதை சொல்லாமல் சொன்னார்.
மரியாள் மனத்தாழ்மையுள்ள பெண்ணாக இருந்ததால், தன் மகன் சொன்னதை உடனே ஏற்றுக்கொண்டார். திருமண விருந்தில் வேலை செய்துகொண்டிருந்தவர்களைப் பார்த்து, ‘அவர் என்ன சொல்கிறாரோ, அதன்படி செய்யுங்கள்’ என்றார். இனி, தான் சொல்கிறபடி மகன் நடக்க வேண்டும் என்றல்ல, மகன் சொல்கிறபடியே தானும் மற்றவர்களும் நடக்க வேண்டும் என்பதை மரியாளின் வார்த்தைகள் வெளிக்காட்டின.
இருப்பினும் தாயின் வார்த்தைக்கு மதிப்பளித்து, தண்ணீரை சுவையான திராட்சை ரசமாக மாற்றி முதல் அற்புதத்தை நிகழ்த்தினார். பரம பிதாவின் உத்தரவு கிடைக்கப் பெறாவிட்டாலும், தாய் மரியாளின் உத்தரவு கிடைத்ததால் முதல் அற்புதத்தை செய்து காட்டினார். இது இயேசுவுடன் இருந்த சீடர்களின் விசுவாசத்தை அதிகரித்தது. கூடவே மரியாளும் மகன்மீது விசுவாசம் வைத்தார். இயேசுவை மகனாக மட்டுமல்ல, தன் எஜமானராகவும், மீட்பராகவும் பார்த்தார். மரியாள் தமக்குப் பக்கபலமாக இருந்ததற்காக இயேசுவும் சந்தோஷப்பட்டிருப்பார்.
ஆகவே பெற்றோரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து வாழ பழகவேண்டும். இயேசு வழியில் நடந்து பெற்றோரின் வார்த்தைக்கு கீழ்படியுங்கள். அது உங்களை கிறிஸ்துவின் பாதையில் வழிநடத்தும்.
மரியாளுக்குத் துக்கம் தொண்டையை அடைக்கிறது, வேதனையில் அவர் நிலைகுலைந்துபோகிறார். பல மணி நேரம் சித்திரவதைச் செய்யப்பட்டு இறந்துபோன தன் மகனின் அவலக்குரல் அவர் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. பட்டப்பகலில் அந்த இடம் முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. இப்போது பூமி அதிர்கிறது’ (மத்தேயு 27:45, 51).
‘இயேசுவின் மரணம், வேறு யாரையும் விட யெகோவாவைத்தான் (பரமபிதா) அதிகமாகப் பாதித் திருக்கும். யெகோவா துடிதுடித்துப் போவதை அவர் உலகிற்குக் காட்டுவதாக மரியாள் நினைத்திருக்கலாம். இருள் சூழ்ந்த கொல்கொதா என்ற இடத்தில், மரியாள் தன் மகனை நினைத்து சோகத்தில் மூழ்கியிருக்கிறார்’ (யோவான் 19:17, 25).
மகனை பறிக்கொடுத்த வேதனை அவரை புலம்ப வைத்தது. மகனின் நினைவுகள் அவர் மனதில் அலைமோதின. 33 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவமும் மரியாளின் ஞாபகத்திற்கு வந்தது.
‘அப்போது, யோசேப்பும், மரியாளும் பச்சிளம் குழந்தையான இயேசுவை எருசலேமில் இருந்த ஆலயத்திற்குக் கொண்டுவந்தார்கள். அங்கே சிமியோன் என்பவர் கடவுளுடைய சக்தியால் எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். இயேசுவைப் பற்றிய பல பிரமிப்பூட்டும் விஷயங்களை அவர் சொன்னார். அதனுடன் நீண்ட வாள் ஒன்று தன் உள்ளத்தில் ஊடுருவிச் செல்வதுபோல் மரியாள் ஒரு நாள் உணர்வார் என்பதையும் சொன்னார்’ (லூக்கா 2:25-35).
அந்த வார்த்தைகளின் அர்த்தம் மகனை இழந்தபோது தான் மரியாளுக்குப் புரிந்தது. பெற்ற பிள்ளைகளின் இழப்பை இதற்கு மேலும் விவரிக்க முடியாது. இன்றைய சமூகத்தில் தாய் பாசம் என்பது, வார்த்தையின் வெளிப்பாடாகவே இருக்கிறது. சில வீடுகளில் 10-ம் வகுப்பு வரை பெற்றோருக்கு கீழ்படிந்திருக்கும் பிள்ளைகள், அதற்கு மேல் தாய் தந்தையரை மதிப்பதில்லை. ஊதாரி நண்பர்களுடன் ஊர் சுற்றிக்கொண்டும், படிப்பில் நாட்டம் செலுத்தாமலும், வீண் வம்புகளில் அடி உதை படுவதுடன், சமூகத்தில் பெற்றோருக்கு இருக்கும் நன்மதிப்பையும் கெடுத்துவிடுகிறார்கள்.
பிள்ளைகளின் உயிர் இழப்பு மட்டுமல்லாது, அவர்களின் ஒழுங்கீன செயல்பாடுகளும் பெற்றோரை பெரிதும் பாதிக்கிறது. புகைப்பழக்கம், மதுபழக்கம் போன்ற பிள்ளைகளின் தவறான செயல்களுக்காக பெற்றோர் வருந்துகிறார்கள். பிள்ளைகளை ஒழுக்கம் தவறி வளர்த்ததற்காக வேதனைப்படுகிறார்கள்.
மரியாளை மட்டுமல்லாது.. தீய பழக்கங் களுக்கு அடிமையாகும் பிள்ளைகளின் தாய்மார்களின் உள்ளத்திலும், நீண்ட வாள் ஒன்று ஊடுருவிச் சென்று கொண்டு தான் இருக்கிறது.
இயேசு இறக்கும் தருவாயிலும், தன்னுடைய தாயை சீடனின் பாதுகாப்பில் விட்டுச் சென்றார். அதுவரை மரியாளை சந்தோஷப்படுத்தி மட்டுமே பார்த்த இயேசு, இறந்த பிறகும் மகிழ்ச்சியாக வாழ வழிவகை ஏற் படுத்தினார். இதுவே உண்மையான தாய் பாசம். இதை இன்றைய தலைமுறையினர் உணரவேண்டும்.
‘அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யுங்கள்’
நாசரேத்திலிருந்து 13 கி.மீ. தூரத்திலிருந்த கானா என்ற ஊருக்கு, தம் குடும்பத்தாரோடும், சீடர்களோடும் ஒரு திருமண விருந்திற்குச் சென்றார், இயேசு. விருந்தில் ஏதோ சலசலப்பு இருப்பதை மரியாள் புரிந்துகொண்டார். விருந்தினர்களுக்கு கொடுக்க இருந்த திராட்சை ரசம் தீர்ந்துவிட்டதால் திருமண வீட்டார் பர பரப்பாக இருந்ததைப் பார்த்தார். அந்த காலத்தில், இதுபோன்ற சம்பவங்கள் திருமண வீட்டாருக்குப் பெரிய அவமானமாக அமைந்து விடும். மரியாளுக்கு அது கஷ்டமாக இருந்ததால், உதவிக்காக இயேசுவிடம் சென்றார்.
‘பரிமாறுவதற்கு அவர்களிடம் திராட்சை ரசம் இல்லை’ என்று இயேசுவிடம் சொன்னார். அதற்கு இயேசு, ‘பெண்மணியே! நீங்கள் சொல்லி நான் செய்ய வேண்டுமா?’ என்று பதிலளித்தார். அவருடைய வார்த்தைகள் மரியாதைக்குறைவாக இல்லாத போதிலும் அது மரியாளுக்கு ஆச்சரியமாக இருந்தது. மரியாளை இயேசு மென்மையாகக் கண்டித்தார். தம்முடைய ஊழியம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி தம் பரலோகபிதா யெகோவாவே தீர்மானிப்பார் என்பதை சொல்லாமல் சொன்னார்.
மரியாள் மனத்தாழ்மையுள்ள பெண்ணாக இருந்ததால், தன் மகன் சொன்னதை உடனே ஏற்றுக்கொண்டார். திருமண விருந்தில் வேலை செய்துகொண்டிருந்தவர்களைப் பார்த்து, ‘அவர் என்ன சொல்கிறாரோ, அதன்படி செய்யுங்கள்’ என்றார். இனி, தான் சொல்கிறபடி மகன் நடக்க வேண்டும் என்றல்ல, மகன் சொல்கிறபடியே தானும் மற்றவர்களும் நடக்க வேண்டும் என்பதை மரியாளின் வார்த்தைகள் வெளிக்காட்டின.
இருப்பினும் தாயின் வார்த்தைக்கு மதிப்பளித்து, தண்ணீரை சுவையான திராட்சை ரசமாக மாற்றி முதல் அற்புதத்தை நிகழ்த்தினார். பரம பிதாவின் உத்தரவு கிடைக்கப் பெறாவிட்டாலும், தாய் மரியாளின் உத்தரவு கிடைத்ததால் முதல் அற்புதத்தை செய்து காட்டினார். இது இயேசுவுடன் இருந்த சீடர்களின் விசுவாசத்தை அதிகரித்தது. கூடவே மரியாளும் மகன்மீது விசுவாசம் வைத்தார். இயேசுவை மகனாக மட்டுமல்ல, தன் எஜமானராகவும், மீட்பராகவும் பார்த்தார். மரியாள் தமக்குப் பக்கபலமாக இருந்ததற்காக இயேசுவும் சந்தோஷப்பட்டிருப்பார்.
ஆகவே பெற்றோரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து வாழ பழகவேண்டும். இயேசு வழியில் நடந்து பெற்றோரின் வார்த்தைக்கு கீழ்படியுங்கள். அது உங்களை கிறிஸ்துவின் பாதையில் வழிநடத்தும்.
மரியாளுக்குத் துக்கம் தொண்டையை அடைக்கிறது, வேதனையில் அவர் நிலைகுலைந்துபோகிறார். பல மணி நேரம் சித்திரவதைச் செய்யப்பட்டு இறந்துபோன தன் மகனின் அவலக்குரல் அவர் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. பட்டப்பகலில் அந்த இடம் முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. இப்போது பூமி அதிர்கிறது’ (மத்தேயு 27:45, 51).
‘இயேசுவின் மரணம், வேறு யாரையும் விட யெகோவாவைத்தான் (பரமபிதா) அதிகமாகப் பாதித் திருக்கும். யெகோவா துடிதுடித்துப் போவதை அவர் உலகிற்குக் காட்டுவதாக மரியாள் நினைத்திருக்கலாம். இருள் சூழ்ந்த கொல்கொதா என்ற இடத்தில், மரியாள் தன் மகனை நினைத்து சோகத்தில் மூழ்கியிருக்கிறார்’ (யோவான் 19:17, 25).
மகனை பறிக்கொடுத்த வேதனை அவரை புலம்ப வைத்தது. மகனின் நினைவுகள் அவர் மனதில் அலைமோதின. 33 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவமும் மரியாளின் ஞாபகத்திற்கு வந்தது.
‘அப்போது, யோசேப்பும், மரியாளும் பச்சிளம் குழந்தையான இயேசுவை எருசலேமில் இருந்த ஆலயத்திற்குக் கொண்டுவந்தார்கள். அங்கே சிமியோன் என்பவர் கடவுளுடைய சக்தியால் எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். இயேசுவைப் பற்றிய பல பிரமிப்பூட்டும் விஷயங்களை அவர் சொன்னார். அதனுடன் நீண்ட வாள் ஒன்று தன் உள்ளத்தில் ஊடுருவிச் செல்வதுபோல் மரியாள் ஒரு நாள் உணர்வார் என்பதையும் சொன்னார்’ (லூக்கா 2:25-35).
அந்த வார்த்தைகளின் அர்த்தம் மகனை இழந்தபோது தான் மரியாளுக்குப் புரிந்தது. பெற்ற பிள்ளைகளின் இழப்பை இதற்கு மேலும் விவரிக்க முடியாது. இன்றைய சமூகத்தில் தாய் பாசம் என்பது, வார்த்தையின் வெளிப்பாடாகவே இருக்கிறது. சில வீடுகளில் 10-ம் வகுப்பு வரை பெற்றோருக்கு கீழ்படிந்திருக்கும் பிள்ளைகள், அதற்கு மேல் தாய் தந்தையரை மதிப்பதில்லை. ஊதாரி நண்பர்களுடன் ஊர் சுற்றிக்கொண்டும், படிப்பில் நாட்டம் செலுத்தாமலும், வீண் வம்புகளில் அடி உதை படுவதுடன், சமூகத்தில் பெற்றோருக்கு இருக்கும் நன்மதிப்பையும் கெடுத்துவிடுகிறார்கள்.
பிள்ளைகளின் உயிர் இழப்பு மட்டுமல்லாது, அவர்களின் ஒழுங்கீன செயல்பாடுகளும் பெற்றோரை பெரிதும் பாதிக்கிறது. புகைப்பழக்கம், மதுபழக்கம் போன்ற பிள்ளைகளின் தவறான செயல்களுக்காக பெற்றோர் வருந்துகிறார்கள். பிள்ளைகளை ஒழுக்கம் தவறி வளர்த்ததற்காக வேதனைப்படுகிறார்கள்.
மரியாளை மட்டுமல்லாது.. தீய பழக்கங் களுக்கு அடிமையாகும் பிள்ளைகளின் தாய்மார்களின் உள்ளத்திலும், நீண்ட வாள் ஒன்று ஊடுருவிச் சென்று கொண்டு தான் இருக்கிறது.
இயேசு இறக்கும் தருவாயிலும், தன்னுடைய தாயை சீடனின் பாதுகாப்பில் விட்டுச் சென்றார். அதுவரை மரியாளை சந்தோஷப்படுத்தி மட்டுமே பார்த்த இயேசு, இறந்த பிறகும் மகிழ்ச்சியாக வாழ வழிவகை ஏற் படுத்தினார். இதுவே உண்மையான தாய் பாசம். இதை இன்றைய தலைமுறையினர் உணரவேண்டும்.
Next Story






