என் மலர்
ஆன்மிகம்

கர்த்தருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுங்கள்
ஒவ்வொரு நாளும் ஆண்டவர் தம் கிருபையினால் நம்மை வழிநடத்தி வந்திருக்கிறார்
ஒவ்வொரு நாளும் ஆண்டவர் தம் கிருபையினால் நம்மை வழிநடத்தி வந்திருக்கிறார். அவருக்கு மகிமை உண்டாவதாக. இச்செய்தியில் தேவனுடைய சித்தத்திற்கு நாம் ஒவ்வொருவரும் அர்ப்பணிக்க வேண்டும் என்ற தலைப்பில் உங்களுக்கு ஜெபத்தோடு எழுதுகிறேன்.
தேவனுடைய சித்தத்தை அறியாமல் இன்று அநேகருடைய வாழ்க்கை கவலையும், கஷ்டமும் நிறைந்ததாக இருக்கிறதை நாம் அறிவோம். ஒவ்வொரு சிறிய காரியத்திலும் தேவனுடைய பரிபூரண சித்தத்தை நாம் அறிந்து செயல்பட வேண்டுமென கர்த்தர் விரும்புகிறார்.
‘நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது’. (யோவான் 4:34)
மேற்கண்ட வசனத்தில் நம் அருமை ஆண்டவர் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றியதை நாம் காண்கிறோம். அவ்வண்ணமே நாமும் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற வேண்டுமல்லவா?
‘அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார்’. (கலா 1:4)
பிரியமானவர்களே! நமக்காக ஆண்டவர் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றியது போல் உங்கள் வாழ்வைக் குறித்த தேவ சித்தத்தை அறிந்து அதை நிறைவேற்றுவது தேவனுக்கு உகந்ததாகும்.
துதிப்பது தேவ சித்தம்
‘எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள் அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது’. (தெச–5:18)
தேவனுடைய பிள்ளையே! நீங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்திருக்கலாம், அறியாமலும் இருக்கலாம். ஆனால் நாம் எல்லாவற்றிற்காகவும் அவரை ஸ்தோத்தரிப்பது தேவ சித்தமாகும்.
தேவனுக்கு ஸ்தோத்திரம் என்பது அவரை மகிமைப்படுத்துவது ஆகும். எப்படிப்பட்ட போராட்டங்கள் உங்களுக்குள் இருந்தாலும் அதற்காக தேவனைத் துதித்து பாருங்கள். துதிகளின் மத்தியில் வாசம் பண்ணும் நம் ஆண்டவர் உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் வாசம் பண்ணி உங்களை நிச்சயம் ஆசீர்வதிப்பார். ஆகவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆண்டவரைத் துதியுங்கள். அவருடைய கிருபையை புகழ்ந்து பாடுங்கள்.
பொறுமையோடு இருப்பது தேவ சித்தம்
‘நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது’. (எபி 10:36)
எனக்கன்பானவர்களே! நம்முடைய வாழ்வில் அவ்வப்போது சில இக்கட்டுகள் இடைஞ்சல்கள் வரும்போது சில தேவ பிள்ளைகள் தங்களுடைய விசுவாசத்தை நழுவ விட்டு அவிசுவாசமான வார்த்தைகளைப் பேசி தேவ கிருபையை இழந்து விடுகிறார்கள்.
அதைப்போல குடும்ப வாழ்விலும் வாக்குத்தத்தம் பண்ணினவர் நிச்சயம் கிருபை செய்வார் என்ற நம்பிக்கையையும், தைரியத்தையும் இழந்து தவறான முடிவெடுக்கிறார்கள்.
உதாரணமாக, சிலர் பொருளாதார காரியத்தில் கர்த்தர் எப்படியாகிலும் நமக்கு உதவி செய்வார் என்ற பொறுமையோடு இருக்காமலும், வாக்குத்தத்தத்தை நம்பாமலும் அவசரப்பட்டு கடன் வாங்கி தங்கள் காரியங்களை நிறைவேற்றுகிறார்கள். அதனால் வருகிற போராட்டங்களை மேற்கொள்ள முடியாமல் மிகவும் சோர்ந்து போய்விடுகிறார்கள்.
பிள்ளைகள் வாழ்வில் தேவ சித்தம்
‘கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்’. (ஏசாயா 53:10)
தேவனுடைய பிள்ளையே! ஆண்டவர் தம்முடைய சித்தத்தின்படியும், நமது மனவிருப்பத்தின்படியும் பிள்ளைகளை நமக்குக் கொடுக்கிறார். ஆனால் பிள்ளைகளை தேவனுக்கேற்ற விதத்தில் வளர்த்து அவர்கள் வாழ்க்கையில் தேவனுடைய சித்தம் இன்னதென்பதை அறிவது பெற்றோருடைய மிகப்பெரிய பொறுப்பாகும். குறிப்பாக பிள்ளைகளின் படிப்பு, ஆவிக்குரிய வாழ்க்கை, வேலை மற்றும் அவர்களுடைய எதிர்காலம் இவை அனைத்திற்காக பெற்றோர்கள் கருத்தாக அனுதினமும் ஜெபம் பண்ணி தேவசித்தத்திற்கு பிள்ளைகளை ஒப்புக் கொடுக்க வேண்டும். உலக மனிதர்கள் உலகப்பிரகாரமாய் தங்கள் காரியங்களை நடத்துவார்கள்.
இயேசு சொன்னார்: ‘உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது’. (மத் 10:29)
ஆகவே உங்கள் பிள்ளைகள் வாழ்வில் தேவனுடைய பரி பூரண சித்தம் நிறைவேற முற்றிலுமாய் உங்களை ஒப்புக்கொடுங்கள்.
ஆகவே எனக்கன்பான தேவனுடைய பிள்ளைகளே! உங்கள் தனிப்பட்ட காரியங்கள், உங்கள் குடும்ப வாழ்க்கை, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் எல்லாவற்றிலும் ஆண்டவர் ஆளுகை செய்து தமது தயவுள்ள சித்தத்தை நிறைவேற்ற முற்றிலுமாய் அர்ப்பணித்து விடுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வு ஆசீர்வாதமாக அமையும்.
அப்போது ‘தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன். எனக்குச் சித்தமானவைகளை எல்லாம் அவன் செய்வான்’ (அப் 13:22) என்று அன்றைக்கு இவ்விதமாய் வாழ்த்தின ஆண்டவர் உங்களையும் வாழ்த்தி ஆசீர்வதிக்க வல்லவராயிருக்கிறார்.
‘கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார்’ (சங்கீதம் 135:6)
தேவனுடைய சித்தத்தை அறியாமல் இன்று அநேகருடைய வாழ்க்கை கவலையும், கஷ்டமும் நிறைந்ததாக இருக்கிறதை நாம் அறிவோம். ஒவ்வொரு சிறிய காரியத்திலும் தேவனுடைய பரிபூரண சித்தத்தை நாம் அறிந்து செயல்பட வேண்டுமென கர்த்தர் விரும்புகிறார்.
‘நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது’. (யோவான் 4:34)
மேற்கண்ட வசனத்தில் நம் அருமை ஆண்டவர் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றியதை நாம் காண்கிறோம். அவ்வண்ணமே நாமும் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற வேண்டுமல்லவா?
‘அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார்’. (கலா 1:4)
பிரியமானவர்களே! நமக்காக ஆண்டவர் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றியது போல் உங்கள் வாழ்வைக் குறித்த தேவ சித்தத்தை அறிந்து அதை நிறைவேற்றுவது தேவனுக்கு உகந்ததாகும்.
துதிப்பது தேவ சித்தம்
‘எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள் அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது’. (தெச–5:18)
தேவனுடைய பிள்ளையே! நீங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்திருக்கலாம், அறியாமலும் இருக்கலாம். ஆனால் நாம் எல்லாவற்றிற்காகவும் அவரை ஸ்தோத்தரிப்பது தேவ சித்தமாகும்.
தேவனுக்கு ஸ்தோத்திரம் என்பது அவரை மகிமைப்படுத்துவது ஆகும். எப்படிப்பட்ட போராட்டங்கள் உங்களுக்குள் இருந்தாலும் அதற்காக தேவனைத் துதித்து பாருங்கள். துதிகளின் மத்தியில் வாசம் பண்ணும் நம் ஆண்டவர் உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் வாசம் பண்ணி உங்களை நிச்சயம் ஆசீர்வதிப்பார். ஆகவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆண்டவரைத் துதியுங்கள். அவருடைய கிருபையை புகழ்ந்து பாடுங்கள்.
பொறுமையோடு இருப்பது தேவ சித்தம்
‘நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது’. (எபி 10:36)
எனக்கன்பானவர்களே! நம்முடைய வாழ்வில் அவ்வப்போது சில இக்கட்டுகள் இடைஞ்சல்கள் வரும்போது சில தேவ பிள்ளைகள் தங்களுடைய விசுவாசத்தை நழுவ விட்டு அவிசுவாசமான வார்த்தைகளைப் பேசி தேவ கிருபையை இழந்து விடுகிறார்கள்.
அதைப்போல குடும்ப வாழ்விலும் வாக்குத்தத்தம் பண்ணினவர் நிச்சயம் கிருபை செய்வார் என்ற நம்பிக்கையையும், தைரியத்தையும் இழந்து தவறான முடிவெடுக்கிறார்கள்.
உதாரணமாக, சிலர் பொருளாதார காரியத்தில் கர்த்தர் எப்படியாகிலும் நமக்கு உதவி செய்வார் என்ற பொறுமையோடு இருக்காமலும், வாக்குத்தத்தத்தை நம்பாமலும் அவசரப்பட்டு கடன் வாங்கி தங்கள் காரியங்களை நிறைவேற்றுகிறார்கள். அதனால் வருகிற போராட்டங்களை மேற்கொள்ள முடியாமல் மிகவும் சோர்ந்து போய்விடுகிறார்கள்.
பிள்ளைகள் வாழ்வில் தேவ சித்தம்
‘கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்’. (ஏசாயா 53:10)
தேவனுடைய பிள்ளையே! ஆண்டவர் தம்முடைய சித்தத்தின்படியும், நமது மனவிருப்பத்தின்படியும் பிள்ளைகளை நமக்குக் கொடுக்கிறார். ஆனால் பிள்ளைகளை தேவனுக்கேற்ற விதத்தில் வளர்த்து அவர்கள் வாழ்க்கையில் தேவனுடைய சித்தம் இன்னதென்பதை அறிவது பெற்றோருடைய மிகப்பெரிய பொறுப்பாகும். குறிப்பாக பிள்ளைகளின் படிப்பு, ஆவிக்குரிய வாழ்க்கை, வேலை மற்றும் அவர்களுடைய எதிர்காலம் இவை அனைத்திற்காக பெற்றோர்கள் கருத்தாக அனுதினமும் ஜெபம் பண்ணி தேவசித்தத்திற்கு பிள்ளைகளை ஒப்புக் கொடுக்க வேண்டும். உலக மனிதர்கள் உலகப்பிரகாரமாய் தங்கள் காரியங்களை நடத்துவார்கள்.
இயேசு சொன்னார்: ‘உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது’. (மத் 10:29)
ஆகவே உங்கள் பிள்ளைகள் வாழ்வில் தேவனுடைய பரி பூரண சித்தம் நிறைவேற முற்றிலுமாய் உங்களை ஒப்புக்கொடுங்கள்.
ஆகவே எனக்கன்பான தேவனுடைய பிள்ளைகளே! உங்கள் தனிப்பட்ட காரியங்கள், உங்கள் குடும்ப வாழ்க்கை, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் எல்லாவற்றிலும் ஆண்டவர் ஆளுகை செய்து தமது தயவுள்ள சித்தத்தை நிறைவேற்ற முற்றிலுமாய் அர்ப்பணித்து விடுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வு ஆசீர்வாதமாக அமையும்.
அப்போது ‘தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன். எனக்குச் சித்தமானவைகளை எல்லாம் அவன் செய்வான்’ (அப் 13:22) என்று அன்றைக்கு இவ்விதமாய் வாழ்த்தின ஆண்டவர் உங்களையும் வாழ்த்தி ஆசீர்வதிக்க வல்லவராயிருக்கிறார்.
‘கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார்’ (சங்கீதம் 135:6)
Next Story






