என் மலர்
ஆன்மிகம்

புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி நாளை மறுநாள் நடக்கிறது
பொம்மாரிமலை புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி நாளை மறுநாள் நடக்கிறது
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள பொம்மாரிமலையில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டு தேர்பவனி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் தேர்பவனி திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா தொடங்கிய நாளிலிருந்து புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் தினந்தோறும் மறை உரை கருத்துக்கள், நவநாள் திருப்பலிகள் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையடுத்து காலையில் அந்தோணியார் பல்த்தசார் பங்குதந்தை, கபிரியேல் ஆகியோரால் திருப்பலிகள் நடத்தி வைக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து இரவு மின் அலங்காரம் செய்யப்பட்ட தேரில் புனித ஆரோக்கிய அன்னை எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து வாணவேடிக்கையுடன் திரளான கிறிஸ்தவர்கள் கூடி தேரை இழுக்க தேர்பவனி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை, ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நார்த்தாமலை போலீசார் செய்து வருகின்றனர்.
திருவிழா தொடங்கிய நாளிலிருந்து புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் தினந்தோறும் மறை உரை கருத்துக்கள், நவநாள் திருப்பலிகள் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையடுத்து காலையில் அந்தோணியார் பல்த்தசார் பங்குதந்தை, கபிரியேல் ஆகியோரால் திருப்பலிகள் நடத்தி வைக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து இரவு மின் அலங்காரம் செய்யப்பட்ட தேரில் புனித ஆரோக்கிய அன்னை எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து வாணவேடிக்கையுடன் திரளான கிறிஸ்தவர்கள் கூடி தேரை இழுக்க தேர்பவனி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை, ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நார்த்தாமலை போலீசார் செய்து வருகின்றனர்.
Next Story






