என் மலர்
ஆன்மிகம்

காவல்கிணறு ஏசுவின் திருஇருதயம் ஆலயம் புனித உபகார அன்னை தேர் பவனி நடந்த போது எடுத்த படம்.
ஏசுவின் திருஇருதய ஆலயம் புனித உபகார அன்னை திருவிழா
காவல்கிணறு ஏசுவின் திருஇருதயம் ஆலயம் புனித உபகார அன்னை திருவிழாவில் தேர் பவனி நடந்தது.
நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த காவல்கிணறு ஏசுவின் திருஇருதய ஆலயம் புனித உபகார அன்னை திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை பாடல் திருப்பலியும், மாலை மறையுரை நற்கருணை ஆசீரும் நடந்தது. 9-ம் திருவிழா அன்று மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு தேர் பவனியும் நடந்தது.
10-ந் திருநாளான நேற்று காலை 5 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா ஆடம்பர பாடல் திருப்பலியும், உறுதி பூசுதல் விழாவும் நடந்தது. திருவிழா திருப்பலியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 3 மணிக்கு தேர் பவனியும், தொடர்ந்து இரவு 10 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.
விழா ஏற்பாடுகளை பங்கு குரு எஸ்.மைக்கிள் மகிழன் அடிகள், பங்கு மேய்ப்பு பணிக்குழு, அன்பியங்கள் மற்றும் பக்த சபையினர் செய்திருந்தனர்.
10-ந் திருநாளான நேற்று காலை 5 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா ஆடம்பர பாடல் திருப்பலியும், உறுதி பூசுதல் விழாவும் நடந்தது. திருவிழா திருப்பலியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 3 மணிக்கு தேர் பவனியும், தொடர்ந்து இரவு 10 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.
விழா ஏற்பாடுகளை பங்கு குரு எஸ்.மைக்கிள் மகிழன் அடிகள், பங்கு மேய்ப்பு பணிக்குழு, அன்பியங்கள் மற்றும் பக்த சபையினர் செய்திருந்தனர்.
Next Story






