என் மலர்
ஆன்மிகம்

இயேசுவை தேடுங்கள்: தேவனுடைய ராஜ்ஜியத்தை தேடுங்கள்
நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள் (கொலொ 3:1)
‘நீ என் தாசன்: நான் உன்னை உருவாக்கினேன்: நீ என் தாசன்: இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை’ (ஏசா.44:21)
இன்றைய சூழ்நிலையிலே அநேக சமயங்களிலே, ‘உறவினர்கள் நம்மை மறந்துவிட்டார்களே! நம்மை யாருமே நினைப்பதில்லை! எனக்கென்று இந்த உலகிலே யார் இருக்கிறார்கள்?’ என்ற தனிமைபடுத்தப்பட்ட மனநிலையுடன் ஏராளமான மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்த மனநிலையுடன் வாழ்பவர்கள் ‘மனிதர்கள் நம்மை மறந்துவிட்டாலும், தேவன் நம்மை கைவிடுவதில்லை’ என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மாறும் உலகில் தேவனின் அன்பு மட்டுமே மாறாதது.
‘ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை’ (ஏசா.49:15) என்ற இறை வசனம் ‘ஆண்டவர் நம்மை மறப்பதேயில்லை, நாம் ஒருநாளும் அவரால் மறக்கப்படு வதில்லை’ என்பதை தெளிவாக விளக்குகிறது.
துன்ப வேலைகளில் ஒரு நாளும் மனிதனை தேடிப் போகாதீர்கள். ஆண்டவரை நீங்கள் மறந்து விடாதிருங்கள். அவரை நோக்கிப் பார்த்தால் நிச்சயம் ஆண்டவர் உங்களை நினைத்து, ஆசீர்வதித்து உயர்த்துவார். நம்முடைய துன்ப வேளைகளிலும், பண உதவி தேவைப்படும் காலங்களிலும், தேவனின் பாதங்களில் சரணடையுங்கள். அவர் நம்முடைய துன்பங்களை அதிகாலை பனிபோல கரைத்துவிடுவார்.
‘உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்து விடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவோ’ (எபி.6:10).
‘என் குடும்பத்திற்காக எவ்வளவு உழைத்தாலும் என்னை யாரும் மதிப்பதில்லையே, என்னை ஏளனமாய்ப் பார்க்கிறார்களே, என்னை தரக்குறைவாய்ப் பேசுகிறார்களே, நம்முடைய உழைப்பு வீணாய் போகிறதே, உழைப்பிற்கான பலன் எனக்குக் கிடைப்பதில்லையே’ என்று வருத்தப்படாதீர்கள். ஏனெனில் உங்களுடைய உழைப்பை தேவன் பார்த்துக்கொண்டிருக்கிறார். நீங்கள் யாருக்காக உழைக்கிறீர்கள், எதற்காக கஷ்டப்படுகிறீர்கள்... என்பதை குறித்துக்கொண்டு, அதற்கான தக்க சன்மானத்தை விரைவிலே உங்களுக்கு கிடைக்கச் செய்வார். மேலும் தேவனை நோக்கி வைக்கப்படும் ஜெபங்களுக்கும் விரைவிலே பலன் உண்டு. நீங்கள் ஆண்டவருக்காக செய்கிற ஒவ்வொரு ஜெபத்தையும், நன்றி மன்றாட்டுகளையும் தேவன் மறக்கவே மாட்டார்.
அந்த காலத்தில் இயேசுவின் பிறப்பை உணர்ந்துக்கொண்ட அரசன், ஆண் குழந்தைகளை கொல்லும் படி உத்தரவிட்டான். அப்போது சில மகப்பேறு மருத்துவச்சிகள், தேவனுக்குப் பயந்து, ஆண் பிள்ளைகள் பிறக்கும்போது, அவர்களை உயிரோடு விட்டு விட்டார்கள். அவர்கள் செய்த இந்த பிரயாசங்களை தேவன் மறக்கவில்லை. அவர்களுக்கு தேவன் நன்மை செய்தார்.
‘மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்’ (யாத்.1:21)
உங்களை நினைத்து, உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒரு நாளும் மறந்து போகாதீர்கள். இறைவனுக்கு பயந்து வாழ பழகிக்கொள்ளுங்கள். நம்முடைய வாழ்க்கை தேவனுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் தேவனின் சகல ஆசீர்வாதங்களும் கிடைக்கப்பெறும்.
‘கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்’. (சங். 115:12)
கர்த்தரை தேடுங்கள் :
கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள் (ஆமோஸ் 5:4)
தேவனுடைய ராஜ்ஜியத்தை தேடுங்கள்
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத்தேயு 6:33)
மேலானவைகளை தேடுங்கள்
நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள் (கொலொ 3:1)
கேளுங்கள்
ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும் (மத்தேயு7:8)
இன்றைய சூழ்நிலையிலே அநேக சமயங்களிலே, ‘உறவினர்கள் நம்மை மறந்துவிட்டார்களே! நம்மை யாருமே நினைப்பதில்லை! எனக்கென்று இந்த உலகிலே யார் இருக்கிறார்கள்?’ என்ற தனிமைபடுத்தப்பட்ட மனநிலையுடன் ஏராளமான மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்த மனநிலையுடன் வாழ்பவர்கள் ‘மனிதர்கள் நம்மை மறந்துவிட்டாலும், தேவன் நம்மை கைவிடுவதில்லை’ என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மாறும் உலகில் தேவனின் அன்பு மட்டுமே மாறாதது.
‘ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை’ (ஏசா.49:15) என்ற இறை வசனம் ‘ஆண்டவர் நம்மை மறப்பதேயில்லை, நாம் ஒருநாளும் அவரால் மறக்கப்படு வதில்லை’ என்பதை தெளிவாக விளக்குகிறது.
துன்ப வேலைகளில் ஒரு நாளும் மனிதனை தேடிப் போகாதீர்கள். ஆண்டவரை நீங்கள் மறந்து விடாதிருங்கள். அவரை நோக்கிப் பார்த்தால் நிச்சயம் ஆண்டவர் உங்களை நினைத்து, ஆசீர்வதித்து உயர்த்துவார். நம்முடைய துன்ப வேளைகளிலும், பண உதவி தேவைப்படும் காலங்களிலும், தேவனின் பாதங்களில் சரணடையுங்கள். அவர் நம்முடைய துன்பங்களை அதிகாலை பனிபோல கரைத்துவிடுவார்.
‘உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்து விடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவோ’ (எபி.6:10).
‘என் குடும்பத்திற்காக எவ்வளவு உழைத்தாலும் என்னை யாரும் மதிப்பதில்லையே, என்னை ஏளனமாய்ப் பார்க்கிறார்களே, என்னை தரக்குறைவாய்ப் பேசுகிறார்களே, நம்முடைய உழைப்பு வீணாய் போகிறதே, உழைப்பிற்கான பலன் எனக்குக் கிடைப்பதில்லையே’ என்று வருத்தப்படாதீர்கள். ஏனெனில் உங்களுடைய உழைப்பை தேவன் பார்த்துக்கொண்டிருக்கிறார். நீங்கள் யாருக்காக உழைக்கிறீர்கள், எதற்காக கஷ்டப்படுகிறீர்கள்... என்பதை குறித்துக்கொண்டு, அதற்கான தக்க சன்மானத்தை விரைவிலே உங்களுக்கு கிடைக்கச் செய்வார். மேலும் தேவனை நோக்கி வைக்கப்படும் ஜெபங்களுக்கும் விரைவிலே பலன் உண்டு. நீங்கள் ஆண்டவருக்காக செய்கிற ஒவ்வொரு ஜெபத்தையும், நன்றி மன்றாட்டுகளையும் தேவன் மறக்கவே மாட்டார்.
அந்த காலத்தில் இயேசுவின் பிறப்பை உணர்ந்துக்கொண்ட அரசன், ஆண் குழந்தைகளை கொல்லும் படி உத்தரவிட்டான். அப்போது சில மகப்பேறு மருத்துவச்சிகள், தேவனுக்குப் பயந்து, ஆண் பிள்ளைகள் பிறக்கும்போது, அவர்களை உயிரோடு விட்டு விட்டார்கள். அவர்கள் செய்த இந்த பிரயாசங்களை தேவன் மறக்கவில்லை. அவர்களுக்கு தேவன் நன்மை செய்தார்.
‘மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்’ (யாத்.1:21)
உங்களை நினைத்து, உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒரு நாளும் மறந்து போகாதீர்கள். இறைவனுக்கு பயந்து வாழ பழகிக்கொள்ளுங்கள். நம்முடைய வாழ்க்கை தேவனுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் தேவனின் சகல ஆசீர்வாதங்களும் கிடைக்கப்பெறும்.
‘கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்’. (சங். 115:12)
கர்த்தரை தேடுங்கள் :
கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள் (ஆமோஸ் 5:4)
தேவனுடைய ராஜ்ஜியத்தை தேடுங்கள்
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத்தேயு 6:33)
மேலானவைகளை தேடுங்கள்
நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள் (கொலொ 3:1)
கேளுங்கள்
ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும் (மத்தேயு7:8)
Next Story






