என் மலர்
ஆன்மிகம்

புனித லூர்து அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நாகர்கோவில் புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா (குடும்ப விழா) நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி மே மாதம் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி நாளை மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு திருக்கொடியேற்றம், திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
2-ந் திருவிழாவான 23-ந் தேதி மாலையில் செபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவில் பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள், பரிசு வழங்குதல், 24-ந் தேதி காலையில் திருப்பலி, நற்கருணை ஆராதனை, மாலையில் சிறப்பு நற்கருணை ஆசீர், செபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவில் மறைக்கல்வி ஆண்டு விழா ஆகியவை நடக்கிறது.
தொடர்ந்து 9-ந் திருவிழாவான 30-ந் தேதி காலை 6 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஆடம்பர மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு தேர்ப்பவனியும், மே மாதம் 1-ந் தேதி காலை 6 மணிக்கு பெருவிழா திருப்பலி, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீரும், இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டமும், பரிசு வழங்குதலும், 8 மணிக்கு நடனப்போட்டியும் நடைபெறுகிறது.
விழா நாட்களில் தினமும் மாலையில் செபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவில் கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை, பங்கு அருட்பணிப் பேரவை, பங்கு இறைமக்கள் இணைந்து செய்துவருகின்றனர்.
2-ந் திருவிழாவான 23-ந் தேதி மாலையில் செபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவில் பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள், பரிசு வழங்குதல், 24-ந் தேதி காலையில் திருப்பலி, நற்கருணை ஆராதனை, மாலையில் சிறப்பு நற்கருணை ஆசீர், செபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவில் மறைக்கல்வி ஆண்டு விழா ஆகியவை நடக்கிறது.
தொடர்ந்து 9-ந் திருவிழாவான 30-ந் தேதி காலை 6 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஆடம்பர மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு தேர்ப்பவனியும், மே மாதம் 1-ந் தேதி காலை 6 மணிக்கு பெருவிழா திருப்பலி, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீரும், இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டமும், பரிசு வழங்குதலும், 8 மணிக்கு நடனப்போட்டியும் நடைபெறுகிறது.
விழா நாட்களில் தினமும் மாலையில் செபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவில் கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை, பங்கு அருட்பணிப் பேரவை, பங்கு இறைமக்கள் இணைந்து செய்துவருகின்றனர்.
Next Story






