என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
போத்தனூர் கத்தோலிக்க ஆலயத்தில் சூசையப்பர் ஆண்டு தொடக்க விழா
Byமாலை மலர்10 Feb 2021 3:41 AM GMT (Updated: 10 Feb 2021 3:41 AM GMT)
போத்தனூரில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில், கோவை மாவட்ட கத்தோலிக்க ஆயர் தாமஸ் அக்குவினாஸ் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.
போத்தனூரில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், கோவை மாவட்ட கத்தோலிக்க ஆயர் தாமஸ் அக்குவினாஸ் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.
முன்னதாக சூசையப்பர் ஆலயத்திற்கு வந்த ஆயருக்கு ஆலயத்தை சேர்ந்த மக்கள் வரிசையாக நின்று கையில் மெழுகு திரி ஏந்தி வரவேற்றனர். பின்னர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலய முகப்பை திறந்து வைத்தார். தொடர்ந்து கொடி மரத்தில் சூசையப்பர் கொடியை ஏற்றினார். இதையடுத்து கொரோனா காலத்தில் இறந்தவர்கள் உடல்களை நல்லடக்கம் செய்த முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த நல்லடக்க குழுவினருக்கு ஆயர் தாமஸ் அக்குவினாஸ் பொன்னாடை போற்றி கவுரவித்து, நினைவு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கோவை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் தனிஸ்லாஸ், புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தை ஹென்றி, உதவி பங்கு தந்தை டேவிட், மற்றும் பக்த சபையினர், பங்கு மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சூசையப்பர் ஆலயத்திற்கு வந்த ஆயருக்கு ஆலயத்தை சேர்ந்த மக்கள் வரிசையாக நின்று கையில் மெழுகு திரி ஏந்தி வரவேற்றனர். பின்னர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலய முகப்பை திறந்து வைத்தார். தொடர்ந்து கொடி மரத்தில் சூசையப்பர் கொடியை ஏற்றினார். இதையடுத்து கொரோனா காலத்தில் இறந்தவர்கள் உடல்களை நல்லடக்கம் செய்த முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த நல்லடக்க குழுவினருக்கு ஆயர் தாமஸ் அக்குவினாஸ் பொன்னாடை போற்றி கவுரவித்து, நினைவு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கோவை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் தனிஸ்லாஸ், புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தை ஹென்றி, உதவி பங்கு தந்தை டேவிட், மற்றும் பக்த சபையினர், பங்கு மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X