என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய சப்பர பவனி
Byமாலை மலர்12 Feb 2020 8:47 AM GMT (Updated: 12 Feb 2020 8:47 AM GMT)
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் திருப்பலி மற்றும் மறையுரையுடன் திருவிழா சப்பர பவனி நடந்தது.
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி புனித அந்தோணியார் திருவிழா 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து மாலை 6 மணிக்கு மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் திருப்பலியும், சிறப்பு மறையுரையுடன் கொடியேற்றம் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை 6 மணி, மாலை 6 மணிக்கு திருப்பலி மற்றும் மறையுரை நடந்தது.
11-ம் திருவிழாவான 10-ந் தேதி காலை 6 மணிக்கு பண்டாரகுளம் பங்கு தந்தை போஸ்கோ குணசீலன் தலைமையில் திருப்பலி, வேலாயுதபுரம் பங்கு தந்தை தலைமையில் மறையுரை, மாலை 7 மணிக்கு பாளை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் திருப்பலி மற்றும் மறையுரையுடன் திருவிழா சப்பர பவனி நடந்தது. 12-வது திருவிழாவான நேற்று திருவிழா நடைபெற்றது இதையடுத்து காலை 4.30 மணிக்கு வாடியூர் பங்கு தந்தை ஸ்டிமன் தலைமையில் திருப்பலியும், வீரவநல்லூர் பங்குத்தந்தை ஞானதினகரன் மறையுரையும், காலை 10 மணிக்கு திருச்செபமாலை நிகழ்ச்சி, காலை 11.30 மணிக்கு பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு பாளையம்செட்டிகுளம் பங்குத்தந்தை அந்தோணிராஜ் தலைமையில் திருப்பலியும், சாந்திநகர் ஒடுக்கப்பட்டோர் பணிக்குழு செயலாளர் சேவியர்ராஜ் தலைமையில் மறையுரை நடக்கிறது. இன்று (12-ந் தேதி) புதன்கிழமை காலை 4.30 மணிக்கு வல்லம் பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் தலைமையில் திருப்பணியும், பாளை ஆயரின் செயலாளர் சுந்தர் தலைமை மறையுரை, 6 மணிக்கு கோவில்பட்டி பங்குத்தந்தை அலாய்சியஸ் துரைராஜ் தலைமையில் திருப்பலி கொடியிறக்கம் நடைபெற்றது.
திருவிழாவிற்கு தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உட்பட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதால் தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி, கோவில்பட்டி, நெல்லை ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை புளியம்பட்டி புனித அந்தோணியார் கோவில் பங்குத்தந்தை மரியபிரான்சிஸ் தலைமையில் சகாயதாசன், உதவிப் பங்குத் தந்தைகள் எட்வின் ஆரோக்கியநாதன், சதீஷ் செல்வ தயாளன் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
11-ம் திருவிழாவான 10-ந் தேதி காலை 6 மணிக்கு பண்டாரகுளம் பங்கு தந்தை போஸ்கோ குணசீலன் தலைமையில் திருப்பலி, வேலாயுதபுரம் பங்கு தந்தை தலைமையில் மறையுரை, மாலை 7 மணிக்கு பாளை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் திருப்பலி மற்றும் மறையுரையுடன் திருவிழா சப்பர பவனி நடந்தது. 12-வது திருவிழாவான நேற்று திருவிழா நடைபெற்றது இதையடுத்து காலை 4.30 மணிக்கு வாடியூர் பங்கு தந்தை ஸ்டிமன் தலைமையில் திருப்பலியும், வீரவநல்லூர் பங்குத்தந்தை ஞானதினகரன் மறையுரையும், காலை 10 மணிக்கு திருச்செபமாலை நிகழ்ச்சி, காலை 11.30 மணிக்கு பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு பாளையம்செட்டிகுளம் பங்குத்தந்தை அந்தோணிராஜ் தலைமையில் திருப்பலியும், சாந்திநகர் ஒடுக்கப்பட்டோர் பணிக்குழு செயலாளர் சேவியர்ராஜ் தலைமையில் மறையுரை நடக்கிறது. இன்று (12-ந் தேதி) புதன்கிழமை காலை 4.30 மணிக்கு வல்லம் பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் தலைமையில் திருப்பணியும், பாளை ஆயரின் செயலாளர் சுந்தர் தலைமை மறையுரை, 6 மணிக்கு கோவில்பட்டி பங்குத்தந்தை அலாய்சியஸ் துரைராஜ் தலைமையில் திருப்பலி கொடியிறக்கம் நடைபெற்றது.
திருவிழாவிற்கு தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உட்பட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதால் தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி, கோவில்பட்டி, நெல்லை ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை புளியம்பட்டி புனித அந்தோணியார் கோவில் பங்குத்தந்தை மரியபிரான்சிஸ் தலைமையில் சகாயதாசன், உதவிப் பங்குத் தந்தைகள் எட்வின் ஆரோக்கியநாதன், சதீஷ் செல்வ தயாளன் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X