search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித செல்வநாயகி அம்மாள் ஆலய தேர்பவனி
    X
    புனித செல்வநாயகி அம்மாள் ஆலய தேர்பவனி

    புனித செல்வநாயகி அம்மாள் ஆலய தேர்பவனி

    திருச்சி ஆலம்தெரு செல்வநாயகிபுரத்தில் அமைந்துள்ள புனித செல்வநாயகி அம்மாள் ஆலய புதிய கொடிமரம் அர்ச்சிப்பு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது.
    திருச்சி ஆலம்தெரு செல்வநாயகிபுரத்தில் அமைந்துள்ள புனித செல்வநாயகி அம்மாள் ஆலய புதிய கொடிமரம் அர்ச்சிப்பு விழா கடந்த 14-ந் தேதி நடந்தது பின்னர் புதிய கொடிமரம் புனிதம் செய்யப்பட்டு, திருவுருவ கொடியை அருட்தந்தையர்கள் கொடிமரத்தில் ஏற்றினார்கள். அதன்பிறகு ஆடம்பர கூட்டு திருப்பலி நிறைவேற்றினார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அன்னையின் அலங்கார தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. திருத்தேர் அலங்கரிக்கப்பட்டு ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஆலம்தெரு, முதலியார்சத்திரம், காஜாப்பேட்டை வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று(திங்கட்கிழமை) மாலை திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.
    Next Story
    ×