search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆட்டுப்பட்டி அந்தோணியார் ஆலய தேர்பவனி
    X

    ஆட்டுப்பட்டி அந்தோணியார் ஆலய தேர்பவனி

    புதுச்சேரி ஆட்டுப்பட்டி புனித பதுவை அந்தோணியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    புதுச்சேரி ஆட்டுப்பட்டி புனித பதுவை அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 10-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் மாலை திருப்பலியும் தொடர்ந்து சிறிய தேர்பவனியும் நடந்தது.

    விழாவில் நேற்று காலை 6.30 மணிக்கு அந்தோணி ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. மாலை 5.30 மணிக்கு புதுவை - கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் திருவிழா திருப்பலியும் தொடர்ந்து ஆடம்பர தேர்பவனியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×