search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா
    X

    பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா

    பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான புனித அந்தோணியார் உருவ பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஊத்துமலை குரு வியான்னி ராஜ் திருப்பலி நடத்தினார். விழாவில் தினமும் சிறப்பு திருப்பலிகள் மறையுரை நடைபெற்றது.

    மறையுரைகளை லாரன்ஸ் சகாயராஜ் பெர்னாட்ஷா இருதயசாமி ஸ்டேன் ஆகியோர் நடத்தினர். விழாவில் நேற்று முன்தினம் இரவு புனித அந்தோணியார் உருவ பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் நேற்று காலை திருவிழா திருப்பலி கொடியிறக்கம் அசனவிருந்து நடைபெற்றது. ஏற்பாடுகளை பங்கு பணியாளர் அமிர்தராசா சுந்தர் அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.
    Next Story
    ×