search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாண்டுப் அந்தோணியார் ஆலய ஆண்டு விழா
    X

    பாண்டுப் அந்தோணியார் ஆலய ஆண்டு விழா

    மும்பை பாண்டுப் மேற்கு டெம்பிபாடாவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 60-வது ஆண்டு விழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
    மும்பை பாண்டுப் மேற்கு டெம்பிபாடாவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 60-வது ஆண்டு விழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. பின்னர் விழா நாட்களில் தினசரி மாலை ஆங்கிலத்திலும், தமிழிலும் நவநாள் திருப்பலி நடந்தது. மேலும் திருவிருந்து திருப்பலி, தேவாலயத்தில் நற்கருணை ஆடம்பர பவனியும் நடந்தது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான தேர் பவனி மற்றும் ஆண்டு விழா சிறப்பு திருப்பலி நடந்தது. சிறப்பு திருப்பலியை ஆயர் தேர்மனிக் சாவியோ பெர்னான்டஸ், பீட்டா் ஜெயகாந்தன், பீட்டர் ரெமிஜியுஸ் ஆகியோர் நிறைவேற்றினர். விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அருட்தந்தையர் செபாஸ்டின், தனம், அருட்சகோதரர் ஸ்டீபன் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×