என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தூய அந்தோணியார் திருத்தல திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    தூய அந்தோணியார் திருத்தல திருவிழா இன்று தொடங்குகிறது

    மார்த்தாண்டம், வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 13-ந் தேதி வரை நடக்கிறது.
    குமரி மாவட்டம் மார்த்தாண்டம், வெட்டுவெந்நியில் தூய அந்தோணியார் திருத்தலம் உள்ளது. இங்கு குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இந்த திருத்தலத்தின் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 13-ந் தேதி வரை நடக்கிறது.

    விழாவின் முதல் நாளான இன்று காலை 10 மணிக்கு ஜெபமாலை, நவநாள் ஜெபமும் தொடர்ந்து, சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. நிகழ்ச்சியில், குழித்துறை மறைமாவட்ட செயலாளர் அருட்பணியாளர் ரசல்ராஜ் தலைமை தாங்குகிறார். கோட்டார் மறை மாவட்ட குருகுல முதல்வர் ஹிலாரியூஸ் மறையுரை வழங்குகிறார்.

    மாலை 6 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் அருட்பணியாளர் மரிய அல்போன்ஸ் கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் ஜான் குழந்தை மறையுரை நிகழ்த்துகிறார்.

    நாளை (புதன்கிழமை) மாலை அருட்பணியாளர் ஜேசுரெத்தினம் தலைமையில் நடக்கும் திருப்பலியில் அருட்பணியாளர் போர்ஜியோ மறையுரையாற்றுகிறார். 8-ந் தேதி மாலையில் அருட்பணியாளர் அந்தோணி முத்து தலைமையிலும், 9-ந் தேதி காலையில் அருட்பணியாளர் அன்பரசன் தலைமையிலும், மாலையில் அருட்பணியாளர் பீட்டர் தலைமையிலும் திருப்பலி நடக்கிறது.

    11-ந் தேதி காலை 8 மணிக்கு அருட்பணியாளர் அகஸ்டின் தலைமையில் முதல்திருவிருந்து திருப்பலி நடைபெறும். அருட்பணியாளர் ஜெயப்பிரகாஷ் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து புனிதரின் தேர்ப்பவனி நடக்கிறது. 12-ந் தேதி மாலையில் அருட்பணியாளர் இன்னசென்ட் தலைமையில் திருப்பலி நடக்கிறது.

    13-ந் தேதி காலை 8 மணிக்கு முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் திருப்பலியும், தொடர்ந்து சமபந்தி விருந்து நடைபெறும். 9.30 மணிக்கு மலையாள திருப்பலியும், 11 மணிக்கு சீரோமலபார் வழிபாட்டு முறை திருப்பலியும், மதியம் 12 மணிக்கு மலங்கரை வழிபாட்டு திருப்பலியும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம் தாஸ் தலைமையில் திருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. அதில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் மறையுரையாற்றுகிறார்.

    திருவிழா நாட்களில் மாலை திருப்பலியை தொடர்ந்து பொதுக்கூட்டமும், 8,9 ஆகிய தேதிகளில் நாடகங்களும் நடக்கிறது.
    Next Story
    ×