என் மலர்
ஆன்மிகம்

உவரி அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரியில் அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரியில் அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி பங்கு ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக வந்து ஆலய கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து நற்கருணை ஆசீர், சிறப்பு பிரார்த்தனை உள்ளிட்டவை நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழா அடுத்த மாதம் 4-ந் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர் உள்ளிட்டவை நடக்கிறது. 13-ம் திருவிழாவான அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந் தேதி காலையில் பெருவிழா திருப்பலி நடக்கிறது.
Next Story






