என் மலர்
ஆன்மிகம்

காட்கோபர் அந்தோணியார் ஆலய திருவிழா 26-ந் தேதி வரை நடக்கிறது
மும்பை காட்கோபர், காமராஜர் நகர் புனித அந்தோணியார் ஆலய 26-வது ஆண்டு திருவிழா வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.
மும்பை காட்கோபர், காமராஜர் நகர் புனித அந்தோணியார் ஆலய 26-வது ஆண்டு திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.
திருவிழாவையொட்டி அனைத்து நாட்களிலும் 6.30 மணிக்கு ஜெபமாலை முடிந்து திருப்பலி நடைபெறுகிறது. நாளை காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர் திருப்பலியும், தியானமும் நடைபெறுகிறது.
இந்த திருப்பலியை பாளையங்கோட்டையில் இருந்து வரும் சகோதரர் சேவியர் மைக்கிள் நிறைவேற்றுகிறார். 26-ந் தேதி காலை 10.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. 1 மணிக்கு சமபந்தி நடக்கிறது. 6.30 மணிக்கு தேர்பவனி நடைபெற உள்ளது.
Next Story






