search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் பெருவிழா கொடி ஏற்றத்துடன் 4-ந்தேதி தொடங்குகிறது
    X

    புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் பெருவிழா கொடி ஏற்றத்துடன் 4-ந்தேதி தொடங்குகிறது

    சின்னமலையில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 466-வது ஆண்டு பெருவிழா கொடி ஏற்றத்துடன் 4-ந்தேதி தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    சென்னை சைதாப்பேட்டை, சின்னமலையில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் 466-வது ஆண்டு பெருவிழா அடுத்த மாதம் (மே) 4-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. ஆண்டு பெருவிழா அடுத்த மாதம் (மே) 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது.

    ஆண்டு பெருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு ஒவ்வொரு தலைப்பில் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 13-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஆடம்பர தேர்த்திருவிழா சென்னை மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

    14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணிக்கு அன்னையின் மாபெரும் விழாவும், அன்று மாலை 6 மணிக்கு சென்னை மயிலை முதன்மை குரு எம்.அருள்ராஜ் தலைமையில் கொடி இறக்கத்துடன் பெருவிழா நிறைவடைகிறது.
    Next Story
    ×