search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மலையடிப்பட்டியில் தூய தோமையார் ஆலய தேர்பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    மலையடிப்பட்டியில் தூய தோமையார் ஆலய தேர்பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.

    மலையடிப்பட்டியில் தூய தோமையார் ஆலய தேர் பவனி

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மலையடிப் பட்டியில் உள்ள மலைத்திருத்தலத்தில் தூயதோமையார் ஆலய தேர்பவனி நடைபெற்றது.
    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மலையடிப் பட்டியில் உள்ள மலைத்திருத்தலத்தில் தூய தோமையார் ஆலயம் உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ந் தேதி மாலை தூய தோமையார் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. கடந்த 20-ந் தேதி ஏசுவின் பாடுகளின் பாஸ்கா தூம்பா பவனி விழாவும், அதைத் தொடர்ந்து 21-ந் தேதி ஏசுவின் உயிர்ப்பு பாஸ்கா ரதபவனியும், தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு தூய தோமையார் ரதம் மலையில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டு மலையடிப்பட்டி நடுவீதியில் உயிர்த்த ஆண்டவர் தூய தோமையார் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெரிய தேர் பவனி நேற்று மாலை நடைபெற்றது. தேர் பவனியை மந்திரித்து சிறப்பு வழிபாடுகள் நடத்திய பின்னர் உயிர்த்த ஏசு மற்றும் தோமையார் சொரூபங்கள் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர் பவனியை பங்குத்தந்தைகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். நிலையில் இருந்து புறப்பட்ட தேர் ஊரைச் சுற்றி மீண்டும் நிலையை வந்தடைந்தது.
    Next Story
    ×