என் மலர்
ஆன்மிகம்

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் சிலுவை பாதை வழிபாடு நடந்த போது எடுத்த படம்.
புனித அமல அன்னை ஆலயத்தில் சிலுவை பாதை வழிபாடு
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது.
ஏசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை கிறிஸ்தவர்கள் புனிதவெள்ளியாக கடைபிடிக்கிறார்கள். இதையொட்டி நேற்று ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் ஏசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் வகையில் பெரிய சிலுவை பாதை வழிபாடு நேற்று பகலில் நடந்தது.
அப்போது ஏசு கிறிஸ்து சிலுவையை சுமந்து சென்றபோது நடந்த 14 நிகழ்வுகளை தியானிக்கும் வகையில் 14 தலங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு நிகழ்வாக நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். ஏசுவின் திருச்சடங்கு வழிபாடு மற்றும் சிலுவை முத்தம், நற்கருணை ஆசீர் ஆகியவை மாலையில் நடந்தது.
இதேபோல் ஈரோடு பிரப்ரோடு கிறிஸ்தவ தேவாலயத்தில் புனிதவெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு கூறிய 7 வார்த்தைகளை கூறி சபை குருவானவர் பிரசங்கம் செய்தார். இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.
ஈரோடு ரெயில்வே காலனி சி.எஸ்.ஐ. ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) காலை உயிர்ப்பு பெருவிழா (ஈஸ்டர்) சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் லூர்து மாதா ஆலயத்தின் சார்பில் நேற்று மாலை சிலுவைபாதை ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு பங்குத்தந்தை ஜாய் சாலிசெரி தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள், ஏசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் 14 இடங்களில் முழங்காலிட்டு ஜெபம் செய்தனர்.
மேலும் ஊர்வலத்தின் போது ஏசு கிறிஸ்து வேடம் அணிந்த ஒருவரை படைவீரர்கள் சவுக்கால் அடித்தபடி சென்றனர். ஈரோடு வ.உ.சி. சிறுவர் பூங்காவில் தொடங்கிய ஊர்வலம் பவானி ரோடு வழியாக சென்று ஆலயத்தை அடைந்தது. இதில் துணை பங்குத்தந்தை நின்டோ கண்ணம்புலா மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டார்கள்.
அப்போது ஏசு கிறிஸ்து சிலுவையை சுமந்து சென்றபோது நடந்த 14 நிகழ்வுகளை தியானிக்கும் வகையில் 14 தலங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு நிகழ்வாக நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். ஏசுவின் திருச்சடங்கு வழிபாடு மற்றும் சிலுவை முத்தம், நற்கருணை ஆசீர் ஆகியவை மாலையில் நடந்தது.
இதேபோல் ஈரோடு பிரப்ரோடு கிறிஸ்தவ தேவாலயத்தில் புனிதவெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு கூறிய 7 வார்த்தைகளை கூறி சபை குருவானவர் பிரசங்கம் செய்தார். இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.
ஈரோடு ரெயில்வே காலனி சி.எஸ்.ஐ. ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) காலை உயிர்ப்பு பெருவிழா (ஈஸ்டர்) சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் லூர்து மாதா ஆலயத்தின் சார்பில் நேற்று மாலை சிலுவைபாதை ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு பங்குத்தந்தை ஜாய் சாலிசெரி தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள், ஏசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் 14 இடங்களில் முழங்காலிட்டு ஜெபம் செய்தனர்.
மேலும் ஊர்வலத்தின் போது ஏசு கிறிஸ்து வேடம் அணிந்த ஒருவரை படைவீரர்கள் சவுக்கால் அடித்தபடி சென்றனர். ஈரோடு வ.உ.சி. சிறுவர் பூங்காவில் தொடங்கிய ஊர்வலம் பவானி ரோடு வழியாக சென்று ஆலயத்தை அடைந்தது. இதில் துணை பங்குத்தந்தை நின்டோ கண்ணம்புலா மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டார்கள்.
Next Story






