என் மலர்
ஆன்மிகம்

நாளை பெரிய வெள்ளிக்கிழமை: துக்க நாளாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கின்றனர்
ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த நாளான தினத்தை பெரிய வெள்ளிக்கிழமை தினமாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இதையொட்டி நாளை (14-ந் தேதி) கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.
கிறிஸ்தவர்களின் தெய்வமான ஏசுகிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நாளை புனித வெள்ளி என்றும் பெரிய வெள்ளி என்றும் அழைக்கின்றனர். இந்த நாளை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைப்பிடிக்கிறார்கள்.
கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வரும் லெந்து நாட்களான 40 நாட்கள் முடியும் கடைசி வாரத்தின் வெள்ளிக்கிழமையை புனித வெள்ளிக்கிழமையாக கடைப்பிடிப்பது வழக்கமாக உள்ளது.
சிலுவையில் அடிக்கப்பட்ட ஏசுகிறிஸ்து மூன்று மணிநேரம் உயிரோடு தொங்க விடப்பட்டார். அதை நினைவுகூரும் வகையில், நாளை அனுஷ்டிக்கப்படும் இந்த தினத்தில் தேவாலயங்களில் மும்மணி நேர சிறப்பு ஆராதனை நடைபெறும். பிரார்த்தனை முடியும் வரை கிறிஸ்தவர்கள் விரதம் இருப்பார்கள்.
ஏசுகிறிஸ்து சிலுவையை தூக்கி கொண்டு செல்லும் போதும், அதில் அறையப்பட்டு கொல்லப்பட்ட நேரத்திலும் 7 திருவசனங்களை கூறினார் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது. அந்த வசனங்களை அடிப்படையாக வைத்து தேவாலயங்களில் நாளை ஆராதனையில் பிரசங்கங்கள் செய்யப்படும்.
சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாளில் (வியாழக்கிழமை) ஏசுகிறிஸ்து தனது 12 சீடர்களுடன் இரவு உணவு அருந்தினார். அதை நினைவுகூரும் வகையில், இன்றைய தினத்தை பெரிய வியாழன், அல்லது வியாகுல வியாழன் என்று கடைப்பிடிக்கின்றனர்.
சிலுவையில் அறையப்பட்ட ஏசுகிறிஸ்து மரணமடைந்து 3-ம் நாள் விடியற்காலையில் உயிர்த்தெழுந்ததாக பைபிள் கூறுகிறது. அந்த தினத்தை ஈஸ்டர் தினம் என்று மகிழ்ச்சிப் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமையை (16-ந் தேதி) ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்வார்கள். அன்று விடியற்காலையில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும்.
கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வரும் லெந்து நாட்களான 40 நாட்கள் முடியும் கடைசி வாரத்தின் வெள்ளிக்கிழமையை புனித வெள்ளிக்கிழமையாக கடைப்பிடிப்பது வழக்கமாக உள்ளது.
சிலுவையில் அடிக்கப்பட்ட ஏசுகிறிஸ்து மூன்று மணிநேரம் உயிரோடு தொங்க விடப்பட்டார். அதை நினைவுகூரும் வகையில், நாளை அனுஷ்டிக்கப்படும் இந்த தினத்தில் தேவாலயங்களில் மும்மணி நேர சிறப்பு ஆராதனை நடைபெறும். பிரார்த்தனை முடியும் வரை கிறிஸ்தவர்கள் விரதம் இருப்பார்கள்.
ஏசுகிறிஸ்து சிலுவையை தூக்கி கொண்டு செல்லும் போதும், அதில் அறையப்பட்டு கொல்லப்பட்ட நேரத்திலும் 7 திருவசனங்களை கூறினார் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது. அந்த வசனங்களை அடிப்படையாக வைத்து தேவாலயங்களில் நாளை ஆராதனையில் பிரசங்கங்கள் செய்யப்படும்.
சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாளில் (வியாழக்கிழமை) ஏசுகிறிஸ்து தனது 12 சீடர்களுடன் இரவு உணவு அருந்தினார். அதை நினைவுகூரும் வகையில், இன்றைய தினத்தை பெரிய வியாழன், அல்லது வியாகுல வியாழன் என்று கடைப்பிடிக்கின்றனர்.
சிலுவையில் அறையப்பட்ட ஏசுகிறிஸ்து மரணமடைந்து 3-ம் நாள் விடியற்காலையில் உயிர்த்தெழுந்ததாக பைபிள் கூறுகிறது. அந்த தினத்தை ஈஸ்டர் தினம் என்று மகிழ்ச்சிப் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமையை (16-ந் தேதி) ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்வார்கள். அன்று விடியற்காலையில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும்.
Next Story






