என் மலர்
ஆன்மிகம்

வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பேராலயத்தில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றபோது எடுத்தபடம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
எருசலேமில் உள்ள பெத்லகேமில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏசுகிறிஸ்து பிறந்தார் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. இறைப் பணியைத் தொடங்குவதற்கு முன்பு ஏசு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அதை நினைவுகூரும் வகையில் தற்போது கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாச நிலையை, லெந்து நாட்கள் அல்லது கஸ்தி நாட்கள் அல்லது தவக்காலம் என்ற பெயரில் கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டு தவக்காலம் கடந்த மார்ச் 1-ந்தேதி சாம்பல் புதன்கிழமையன்று தொடங்கியது. 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை, குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எருசலேம் நகரத்துக்குள் கழுதைக் குட்டி மேல் அமர்ந்து வரும்போது, மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து வாழ்த்து பாடல்களைப் பாடினர். இதை நினைவு கூரும் வகையில் குருத்தோலை பவனி நடைபெற்று வருகிறது.
குருத்தோலை ஞாயிறையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்று காலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார். பேராலய பங்கு தந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் ஜோதிநல்லப்பன், ஆரோக்கிய சுந்தரம் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் பல மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியபடி கீர்த்தனைகள் பாடியவாறு பவனியாக சென்றனர். குருத்தோலை ஞாயிறையொட்டி நேற்று முழுவதும் வேளாங்கண்ணி பேராலயத்தில் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை, குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எருசலேம் நகரத்துக்குள் கழுதைக் குட்டி மேல் அமர்ந்து வரும்போது, மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து வாழ்த்து பாடல்களைப் பாடினர். இதை நினைவு கூரும் வகையில் குருத்தோலை பவனி நடைபெற்று வருகிறது.
குருத்தோலை ஞாயிறையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்று காலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார். பேராலய பங்கு தந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் ஜோதிநல்லப்பன், ஆரோக்கிய சுந்தரம் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் பல மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியபடி கீர்த்தனைகள் பாடியவாறு பவனியாக சென்றனர். குருத்தோலை ஞாயிறையொட்டி நேற்று முழுவதும் வேளாங்கண்ணி பேராலயத்தில் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
Next Story






