என் மலர்
ஆன்மிகம்

தஞ்சையில் புனித செபஸ்தியார் திருவிழா தேர்பவனி
தஞ்சை மகர்நோம்புச்சாவடியில் உள்ள புனித அந்தோணி யார் ஆலயத்தில் புனித செபஸ்தியார் திருவிழாவையொட்டி நேற்று இரவு தேர்பவனி நடைபெற்றது.
தஞ்சை மகர்நோம்புச்சாவடி யில் உள்ள புனித அந்தோணி யார் ஆலயத்தில் புனித செபஸ்தியார் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று இரவு தேர்பவனி நடைபெற்றது. இந்த தேர் பவனியை பங்குத்தந்தைகள் அந்தோணி டேனியல், மரியலூயிஸ் ஆகியோர் தொடங்கிவைத்தனர். முன்னதாக வாணவேடிக்கைகள் நடைபெற்றன.
கடந்த 13-ந் தேதி அன்று பொங்கல் திருப்பலியுடன் விழா தொடங்கியது. அதன்பின்னர் புனித செபஸ்தியாரின் திருசொரூபம் படி இறக்குதல், பிரார்த்தனைகள், திருக்கொடி பவனி, கொடியேற்றம், உருவ பட பவனி ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) விழா நிறைவுநாள் நிகழ்ச்சி நடக்கிறது.
கடந்த 13-ந் தேதி அன்று பொங்கல் திருப்பலியுடன் விழா தொடங்கியது. அதன்பின்னர் புனித செபஸ்தியாரின் திருசொரூபம் படி இறக்குதல், பிரார்த்தனைகள், திருக்கொடி பவனி, கொடியேற்றம், உருவ பட பவனி ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) விழா நிறைவுநாள் நிகழ்ச்சி நடக்கிறது.
Next Story






