என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாலுமாவடியில் வியாபாரிகளுக்கு சிறப்பு ஆசீர்வாத உபவாச ஜெபம் மார்ச் 11-ந்தேதி நடைபெறுகிறது
    X

    நாலுமாவடியில் வியாபாரிகளுக்கு சிறப்பு ஆசீர்வாத உபவாச ஜெபம் மார்ச் 11-ந்தேதி நடைபெறுகிறது

    நாசரேத் மற்றும் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடியில் சிறப்பு ஆசீர்வாத உபவாச ஜெபம் மார்ச் 11-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிமுதல் 3 மணி வரை நடைபெறுகிறது.
    நாசரேத் மற்றும் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார். தேவனுடைய கூடாரத்தில் வியாபாரம், தொழில் செய்கிறவர்களுக்காக சிறப்பு ஆசீர்வாத உபவாச ஜெபம் மார்ச் 11-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிமுதல் 3 மணி வரை நடைபெறுகிறது.

    இதில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் குழுவினர் சிறப்பு பாடல்கள் பாடுகின்றனர். தொழில், வியாபாரம், ஆசீர்வாதமாய் இருக்க, கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை பெற, தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தில் இருந்து விடுதலைபெற, தொழில்மற்றும் வியாபாரங்களுக்கு விரோதமான மந்திர மற்றும் பில்லிசூனிய கட்டுகளில் இருந்து விடுதலைபெற தேவ ஆலோசனை களையும், சிறப்பு ஜெபத்தையும் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ், உடன்ஊழியர் அப்பாத்துரை ஆகியோர் ஏறெடுக்கின்றனர்.

    தொழில் மற்றும் வியாபாரம் செய்கிறவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நாலுமாவடி இயேசுவிடுவிக்கிறார் ஊழியக்குழுவினர் கேட்டுள்ளனர். ஆசீர்வாதஉபவாச ஜெபத்தில் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட தொழிலதிபர்களின் சாட்சிகள் இடம் பெறுகிறது.

    ஆசீர்வாத உபவாச ஜெபம் கூட்டம் முடிந்ததும் திரும்பிச் செல்வதற்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×