என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆர்.எஸ்.புரத்தில் புனித அருளானந்தர் ஆலய தேர் திருவிழா நாளை நடக்கிறது
    X

    ஆர்.எஸ்.புரத்தில் புனித அருளானந்தர் ஆலய தேர் திருவிழா நாளை நடக்கிறது

    கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோட்டில் புனித அருளானந்தர் ஆலயத்தின் தேர் திருவிழா நாளை மாலை 6 மணிக்கும், இரவு 7.30 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது.
    கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோட்டில் புனித அருளானந்தர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர் திருவிழா கடந்த 29-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. புனித அருளானந்தரின் திருநாளையொட்டி ஜெபமாலை இன்று(சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. மாலை 6 மணிக்கு சிறப்பு நவநாள், திருப்பலி, மறையுரை, வேண்டுதல் தேர் ஆகியவற்றை தர்மபுரி மறைமாவட்ட முதன்மை குரு சூசை நடத்துகிறார்.

    நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. 8 மணிக்கு கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் கூட்டு பாடற்பலி நடக்கிறது. காலை 10 மணிக்கு புனித சூசையப்பர் இளங்குருமட அதிபர் ஆரோக்கியசாமி அடிகள் ஆங்கிலத்தில் திருப்பலி நடத்துகிறார். மாலை 5 மணிக்கு மேட்டுப்பாளையம் மறைமாவட்ட முதன்மை குரு ஜேக்கப் கூட்டு பாடற்பலி நடத்துகிறார். மாலை 6 மணிக்கு தேர்பவனியும், இரவு 7.30 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது.
    Next Story
    ×