என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அழகப்பபுரம் புனித காணிக்கை அன்னை திருவிழாவில் தேரோட்டம்
    X

    அழகப்பபுரம் புனித காணிக்கை அன்னை திருவிழாவில் தேரோட்டம்

    அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித காணிக்கை அன்னை திருவிழா முன்னிட்டு நேற்று அதிகாலை செட்டிவிளை பங்குதந்தை பீட்டர் பால் தலைமையிலும் திருப்பலி நடந்தது.
    அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித காணிக்கை அன்னை திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. திருவிழா நாட்களில் ஜெபமாலை பவனி, மறையுரை, நற்கருணை ஆசீர், திருப்பலி போன்றவை நடந்தன. திருவிழாவின் 9-வது நாளான நேற்று முன்தினம் சாத்தான்குளம் வட்டார முதன்மைகுரு ரெமிஜியுஸ் தலைமையில் மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு தேர்ப்பவனியும் நடந்தது.

    விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலை வடக்கன்குளம் வட்டார முதன்மைகுரு ததேயுஸ் ராஜன் தலைமையிலும், காலை 7 மணிக்கு செட்டிவிளை பங்குதந்தை பீட்டர் பால் தலைமையிலும் திருப்பலி நடந்தது. மதியம் 2 மணிக்கு புனித காணிக்கை அன்னையின் தேர்ப்பவனியும், இரவு நற்கருணை ஆசீரும் நடந்தன. தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை மைக்கிள் ஜெகதீஸ், உதவி பங்குதந்தை சூசைமணி, பங்கு பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×