என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கடவுள் அருளும் ஆசீர்வாதம்
    X

    கடவுள் அருளும் ஆசீர்வாதம்

    இறைவனிடம் எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் அவருடைய காணிக்கையைச் செலுத்துவோம்.
    உலகம் உனக்கு நிலையானது அல்ல, அது தற்காலிகமானது; நீ நித்திய இராஜ்யத்துக்குப் போகத்தக்கதாக நான் உனக்குக் கொடுத்துள்ள ஆசீர்வாதத்தில் ஒரு பகுதியைக் காணிக்கையாய் எனக்குக் கொடு என்று கேட்கும் கடவுள், நமக்கு என்ன கைமாறு செய்கிறார்? பள்ளிக்கூடத்திலிருந்து மாலை பசியோடு வீடு திரும்பும் குழந்தைக்கு தட்டு நிறைய இனிப்புப் பதார்த்தம் கொடுத்து, அது ருசித்து உண்ணும் அழகை ரசிக்கும் தாய், “செல்லம்! என் கண்ணுல்ல... உன் அம்மாவுக்கு கொஞ்சம் தாயேன்” என்று கை நீட்டிக் கேட்கும் போது, குழந்தையும் தன் பிஞ்சு விரல்களால் சிறிது எடுத்து அதைத் தாயிடம் கொடுக்க, தாய் அதை அப்படியே அதன் வாயிலேயே ஊட்டி விடுவதோடு, பிள்ளையை அப்படியே வாரி அணைத்து முத்தமழையினால் தன் அன்பை வெளிப்படுத்துவாள் அல்லவா? ஆம்... அதைவிட நம் தேவன் அதிக அன்புள்ளவர் அல்லவா? அவருக்கு உரித்தான காணிக்கையை நாம் செலுத்தும்போது,

    “…. நீங்கள் எவ்விதத்திலும் சம்பூர்ணமுள்ளவர்களாவீர்கள்” (2கொரி.9: 11) என்றும்,

    “…. உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்” (2கொரி.9: 10) என்றும்,

    “கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்…” (லூக்.6: 38) என்றும்,

    “…… அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடம் கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்க மாட்டேனோவென்று என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (மல்லி.3: 10).

    அவரை சோதித்துப் பார்க்கும் தகுதி நமக்கு இல்லை என்பதை உணர்ந்தவர்களாய், எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் அவருடைய காணிக்கையைச் செலுத்துவோம்.
    Next Story
    ×