என் மலர்
ஆன்மிகம்

புனித அல்போன்சா ஆலயத்துக்கு திருத்தல திருப்பயணம்
புனித அல்போன்சா ஆலயத்தில் சிறப்பு நவநாள் மற்றும் சிறப்பு திருப்பலி நடந்தது.
நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல திருவிழாவின் 9-ம் நாள் அன்று புனித அல்போன்சா துயரங்களை தாங்கி, துயரங்களை வாழ்க்கை முறைமையாக்கி இறைவனுக்கு அர்ப்பணித்ததை நினைவு கூறும் வகையில் அவரவர் இடங்களில் இருந்து நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் உள்ள புனித அல்போன்சா திருத்தலத்துக்கு நடந்தே வந்து தங்களின் வேண்டுதல் நேர்ச்சையை நிறைவேற்றுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு திருவிழாவின் 9-ம் நாளையொட்டி புனித அல்போன்சா ஆலயத்துக்கு பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் திருப்பயணமாக வந்தனர். சீரோ மலபார் கத்தோலிக்க சபையின் தக்கலை மறைமாவட்டத்தின் ஆலயங்கள் அமைந்துள்ள நித்திரவிளை, படந்தாலுமூடு, முன்சிறை, கிள்ளியூர், கருங்கல், குளச்சல், குலசேகரம், ஆறுகாணி, மஞ்சாலுமூடு, முக்கூட்டுக்கல், களியல், மார்த்தாண்டம், தக்கலை, பளுகல், மாலைகோடு, காட்டாத்துறை, பிலாங்காலை, மேக்கா மண்டபம், பறக்கோடு, சூசைபுரம், பாலப்பள்ளம், பிலாங்கரை, மாங்கரை ஆகிய பகுதிகளில் உள்ள பங்கு மக்கள் திரளாக நடந்து திருத்தலம் வந்து தங்களின் நேர்ச்சையை நிறைவேற்றினர்.
1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள் பலர் கலந்து கொண்டனர். இத்திருத்தல பயணத்தை தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜோசப் முட்டத்துப்பாடம், அருட்தந்தை பெலிக்ஸ் நாதன், சூசைபுரம் வட்டார முதன்மை பணியாளர் ஆன்றனி ஜோஸ் ஆகியோர் நெறிப்படுத்தினர்.
நடைபயணமாக திருத்தலத்துக்கு வந்தவர்களை திருத்தல அதிபர் தாமஸ் பவ்வத்து பறம்பில், திருத்தல துணை பங்குத்தந்தை சனல் ஜான் ஆகியோர் வரவேற்றனர். தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து புனித அல்போன்சா சிறப்பு நவநாள் மற்றும் சிறப்பு திருப்பலி நடந்தது.
அதேபோல இந்த ஆண்டு திருவிழாவின் 9-ம் நாளையொட்டி புனித அல்போன்சா ஆலயத்துக்கு பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் திருப்பயணமாக வந்தனர். சீரோ மலபார் கத்தோலிக்க சபையின் தக்கலை மறைமாவட்டத்தின் ஆலயங்கள் அமைந்துள்ள நித்திரவிளை, படந்தாலுமூடு, முன்சிறை, கிள்ளியூர், கருங்கல், குளச்சல், குலசேகரம், ஆறுகாணி, மஞ்சாலுமூடு, முக்கூட்டுக்கல், களியல், மார்த்தாண்டம், தக்கலை, பளுகல், மாலைகோடு, காட்டாத்துறை, பிலாங்காலை, மேக்கா மண்டபம், பறக்கோடு, சூசைபுரம், பாலப்பள்ளம், பிலாங்கரை, மாங்கரை ஆகிய பகுதிகளில் உள்ள பங்கு மக்கள் திரளாக நடந்து திருத்தலம் வந்து தங்களின் நேர்ச்சையை நிறைவேற்றினர்.
1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள் பலர் கலந்து கொண்டனர். இத்திருத்தல பயணத்தை தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜோசப் முட்டத்துப்பாடம், அருட்தந்தை பெலிக்ஸ் நாதன், சூசைபுரம் வட்டார முதன்மை பணியாளர் ஆன்றனி ஜோஸ் ஆகியோர் நெறிப்படுத்தினர்.
நடைபயணமாக திருத்தலத்துக்கு வந்தவர்களை திருத்தல அதிபர் தாமஸ் பவ்வத்து பறம்பில், திருத்தல துணை பங்குத்தந்தை சனல் ஜான் ஆகியோர் வரவேற்றனர். தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து புனித அல்போன்சா சிறப்பு நவநாள் மற்றும் சிறப்பு திருப்பலி நடந்தது.
Next Story






