என் மலர்
ஆன்மிகம்

சேலம் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி
சேலம் சூரமங்கலம் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நேற்று நடந்தது.
சேலம் சூரமங்கலம் அந்தோணியார்புரத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் மாலையில் நவநாள் ஜெபம், திருப்பலி ஆகியவை நடைபெற்றது. திருவிழாவில் நேற்று மாலை சிறப்பு திருப்பலி நடந்தது. இதைத்தொடர்ந்து ஆலயத்தில் தேர்பவனி நடந்தது.
மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. ஆலயத்தில் தொடங்கிய இந்த தேர்பவனி ஜங்சன், தர்மன்நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளின் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு நற்கருணை ஆசி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை மற்றும் பங்கு பேரவையினர் செய்திருந்தனர்.
மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. ஆலயத்தில் தொடங்கிய இந்த தேர்பவனி ஜங்சன், தர்மன்நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளின் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு நற்கருணை ஆசி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை மற்றும் பங்கு பேரவையினர் செய்திருந்தனர்.
Next Story






