என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செஞ்சி புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி
    X

    செஞ்சி புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி

    செஞ்சி புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி சிறப்பாக நடந்தது.
    செஞ்சி நகரம் ஆர்.சி. கிருஷ்ணாபுரத்தில் சிங்கவரம் சாலையில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு பெருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஆலயத்தில் தேர்பவனி நடந்தது. காலையில் சிறப்பு பிரார்த்தனையும், மாலையில் திருப்பலியும் நடந்தது.

    பின்னர் இரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடந்தது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்த தேர் பவனி வட்டார முதன்மை குரு பிச்சை முத்து தலைமையில் நடந்தது. செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×