என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    பட்டுக்கோட்டை அருகே உள்ள வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 5-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவிற்கு பட்டுக்கோட்டை மறைவட்ட அதிபர் மரியசூசை தலைமை தாங்கினார். அதனைத்தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பங்கு தந்தையர்கள் ஏ.ஆர். அல்போன்ஸ் (சஞ்சாய்நகர்), செபஸ்டின் (ஒரத்தநாடு), கபிரியேல் (அம்மாசத்திரம்), அடைக்கலம் (பட்டுக்கோட்டை), ஆரோக்கியசுந்தரம் (வேளாங்கண்ணி), சுரேஷ் (பட்டுக்கோட்டை), டெரென்ஸ் (தஞ்சை) ஆகியோர் கலந்து கொண்டனர்

    விழாவிற்கான ஏற்பாடுகளை வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டி புனித அந்தோணியார் ஆலய பங்கு தந்தை நித்திய சகாயராஜ், பங்கு மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×