என் மலர்
ஆன்மிகம்

அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
நாகர்கோவில் அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனியில் அற்புத குழந்தை இயேசு ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் குடும்ப விழா நாளை மாலை 6 மணிக்கு செபமாலை, திருக்கொடியேற்றம், திருப்பலியுடன் தொடங்குகிறது. இதற்கு கோவை ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமை தாங்குகிறார்.
30-ந் தேதி மாலை நடைபெறும் செபமாலை, திருப்பலிக்கு அருட்தந்தை ஜெரேமியாஸ் தலைமை தாங்குகிறார். குளச்சல் வட்டார முதல்வர் எம்.உபால்டு மறையுரையாற்றுகிறார். 1-ந் தேதி காலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு மறை மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் எம் போர்ஜியோ தலைமை தாங்குகிறார். அருட்தந்தை ஆன்றனி மறையுரையாற்றுகிறார்.
2-ந் தேதி மாலை 6 மணிக்கு மறை மாவட்ட குருமட அதிபர் மைக்கேல் ராஜ் தலைமையில் செபமாலை, திருப்பலியும் மற்றும் கன்னியாகுமரி நசரேன் மறையுரையாற்றுகிறார். 3-ந் தேதி மாலை 6 மணிக்கு செபமாலை, திருப்பலி நடக்கிறது. சகாயபுரம் அருட்தந்தை ஜார்ஜ் வின்சென்ட் தலைமையில், எம்.ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். இதேபோல் விழா நாட்களில் தினமும் திருப்பலி நடக்கிறது.
7-ந் தேதி அன்று மாலை 5.30 மணிக்கு செபமாலையும், 6 மணிக்கு பங்கு பணியாளர் இல்லம் மந்திரிப்பும் நடக்கிறது. இதற்கு கோட்டார் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்குகிறார். 8-ந் தேதி அன்று காலை 7 மணிக்கு நடைபெற உள்ள திருப்பலிக்கு மறை மாவட்ட முதன்மை பணியாளர் சாலமோன் தலைமை தாங்குகிறார். ரொமரிக் ததேயுஸ் மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு செபமாலை, நற்கருணை ஆசீர், திருக்கொடியிறக்கமும், 6.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா பொதுக்கூட்டமும், கலை நிகழ்ச்சிகளும், இரவு 8 மணிக்கு சமபந்தி விருந்தும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், பங்கு அருட்பணிப்பேரவை, பங்குதந்தைகள் செய்து வருகின்றனர்.
30-ந் தேதி மாலை நடைபெறும் செபமாலை, திருப்பலிக்கு அருட்தந்தை ஜெரேமியாஸ் தலைமை தாங்குகிறார். குளச்சல் வட்டார முதல்வர் எம்.உபால்டு மறையுரையாற்றுகிறார். 1-ந் தேதி காலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு மறை மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் எம் போர்ஜியோ தலைமை தாங்குகிறார். அருட்தந்தை ஆன்றனி மறையுரையாற்றுகிறார்.
2-ந் தேதி மாலை 6 மணிக்கு மறை மாவட்ட குருமட அதிபர் மைக்கேல் ராஜ் தலைமையில் செபமாலை, திருப்பலியும் மற்றும் கன்னியாகுமரி நசரேன் மறையுரையாற்றுகிறார். 3-ந் தேதி மாலை 6 மணிக்கு செபமாலை, திருப்பலி நடக்கிறது. சகாயபுரம் அருட்தந்தை ஜார்ஜ் வின்சென்ட் தலைமையில், எம்.ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். இதேபோல் விழா நாட்களில் தினமும் திருப்பலி நடக்கிறது.
7-ந் தேதி அன்று மாலை 5.30 மணிக்கு செபமாலையும், 6 மணிக்கு பங்கு பணியாளர் இல்லம் மந்திரிப்பும் நடக்கிறது. இதற்கு கோட்டார் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்குகிறார். 8-ந் தேதி அன்று காலை 7 மணிக்கு நடைபெற உள்ள திருப்பலிக்கு மறை மாவட்ட முதன்மை பணியாளர் சாலமோன் தலைமை தாங்குகிறார். ரொமரிக் ததேயுஸ் மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு செபமாலை, நற்கருணை ஆசீர், திருக்கொடியிறக்கமும், 6.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா பொதுக்கூட்டமும், கலை நிகழ்ச்சிகளும், இரவு 8 மணிக்கு சமபந்தி விருந்தும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், பங்கு அருட்பணிப்பேரவை, பங்குதந்தைகள் செய்து வருகின்றனர்.
Next Story






